Skip to main content

வேறு ஆணுடன் 'தொடர்பு!'; சித்தியை கொலைச்செய்த வாலிபர்!

Published on 05/07/2020 | Edited on 05/07/2020

 

krishnagiri  women incident youth arreseted police investigation


கிருஷ்ணகிரி அருகே, கணவரை இழந்த சித்தி உறவுமுறை கொண்ட பெண் வேறு ஆணுடன் நெருங்கிப் பழகியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை மது பாட்டிலால் அடித்துக்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள போத்தாபுரம் மணிமாடி கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் மாது. இவர், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருடைய மனைவி மலர் (38). தட்டுவடை தயாரித்து விற்பனை செய்து வந்தார். இவருக்கு 15 வயதில் ஒரு மகளும், 12 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

 

கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு இரவு, கடையை பூட்டிவிட்டு மலர் வீட்டுக்குக் கிளம்பினார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு வந்து சேராததால், பதற்றம் அடைந்த உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர். இந்நிலையில், போத்தாபுரம் அருகே உள்ள கால்வாயில் மலர் சடலமாகக் கிடப்பது தெரிய வந்தது.

 

இதுகுறித்து காவேரிப்பட்டணம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலம் கிடந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் மலர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் கிடந்தது. விசாரணையில் மலருக்கும், அவருடைய உறவினரான காந்தி (28) என்பவருக்கும் தவறான தொடர்பு இருந்து வந்தது தெரிய வந்தது. 

krishnagiri  women incident youth arreseted police investigation

சந்தேகத்தின்பேரில் காந்தியைப் பிடித்து விசாரித்ததில், அவர்தான் மலரை கொலை செய்தார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர். காந்தி அளித்த வாக்குமூலம் குறித்து காவல்துறையினர் கூறியதாவது: ''கொலையுண்ட மலர், காந்திக்கு சித்தி உறவுமுறை ஆகிறது. மலரின் கணவர் இறந்த பிறகு, காந்திதான் அவருக்கு ஆறுதல் கூறி வந்துள்ளார். இதில் அவர்கள் இருவருக்கும் உறவுமுறை மீறிய நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. 

 

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மலர், வேறு ஒரு நபருடன் நெருங்கிப்பழக ஆரம்பித்திருக்கிறார். இதனால் விரக்தி அடைந்த காந்தி, தன்னைத் தவிர வேறு யாருடனும் பழகக் கூடாது என்று மலரை கண்டித்தார். ஆனால் அவர் அதை கண்டுகொள்ளாமல் அந்த நபருடன் தொடர்பில் இருந்தார். சம்பவத்தன்று இரவு மலரை வரவழைத்த காந்தி, குடிபோதையில் அவருடைய தலையில் மதுபாட்டிலால் குத்தி கொலை செய்தார். சடலத்தை தூக்கிச்சென்று கால்வாயில் போட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார். அதன்பின் அவருடைய செல்போன் சிக்னலை வைத்து அவரை கைது செய்தோம்,'' என காவல்துறையினர் கூறினர். இதையடுத்து காந்தியை, சேலம் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.