Skip to main content

'தொடர்பை'க் கண்டித்த கணவன் கொலை; மனைவி, ஆண் நண்பர் கைது !

Published on 07/04/2020 | Edited on 07/04/2020


கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜா கடை அருகே உள்ள பழையூர் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் (29).இவர் தர்மபுரியில் உள்ள இனிப்பு பலகாரம் தயாரிக்கும் கடையில் வேலை செய்து வந்தார்.இவருடைய மனைவி ஆஷா (24). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.அதே பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (20). இரும்பு கம்பி கட்டும் வேலை செய்து வருகிறார்.இவருக்கும் ஆஷாவுக்கும் கடந்த ஆறு மாதமாக முறை தவறிய உறவு இருந்து வந்துள்ளது.
 

இதுகுறித்து அரசல்புரசலாக வடிவேலுக்குத் தெரிய வந்ததால்,மணிகண்டனுடன் பழகுவதை நிறுத்தி விடுமாறு மனைவியைக் கண்டித்தார்.கணவன் கண்டித்தது குறித்து மணிகண்டனிடம் கூறியுள்ளார் ஆஷா.
 

 

KRISHNAGIRI INCIDENT POLICE INVESTIGATION


தங்களின் தவறான தொடர்புக்கு வடிவேல் இடையூறாக நிற்பதால் அவரைத் தீர்த்துக்கட்டிவிட ஆஷாவும், மணிகண்டனும் திட்டமிட்டனர். இதையடுத்து ஏப்ரல் 4ம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வடிவேலை, இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்தனர். 

வழக்கமாக அதிகாலை 03.00 மணியளவில்,பால் வாங்குவதற்காக எழுந்து வரும் வடிவேல், மறுநாள் காலையில் வெகு நேரம் ஆகியும் வராததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர்.அவர் கொல்லப்பட்டது குறித்து அறிந்த அப்பகுதியினர்,இதுகுறித்து மஹாராஜாகடை காவல்நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். 

காவல்துறை விசாரணையில் பரபரப்புத் தகவல்கள் கிடைத்தன.வடிவேலும், ஆஷாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.இனிப்பு பலகாரம் தயாரிக்கும் கடைக்கு வேலைக்குச் சென்று வந்த வடிவேல்,அடிக்கடி வேலை காரணமாக அங்கேயே இரவில் தங்கி விடுவாராம்.அந்த இடைவெளியில்தான் ஆஷாவிற்கு அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டனுடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடையில் நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். 
 

http://onelink.to/nknapp


அவர்களின் நெருக்கத்தை அறிந்து கொண்ட வடிவேல்,மனைவியைக் கண்டித்துள்ளார்.அதனால்தான் ஆஷாவும், அவருடைய ஆண் நண்பரும் வடிவேலை அடித்துக் கொலை செய்திருப்பது காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.

சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.வடிவேலை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்ததை ஆஷாவும், மணிகண்டனும் ஒப்புக்கொண்டதை அடுத்து, அவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

யோகா மாஸ்டர் அடித்து கொலை; விசாரணையில் பகீர்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

கராத்தே மாஸ்டர் காணாமல் போன சம்பவத்தில், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது  சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலுள்ள கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் அந்த பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கராத்தே மாஸ்டராகவும், யோகா மாஸ்டராகவும் பணியாற்றி வந்தார். இவரிடம் பல்வேறு குழந்தைகள் கராத்தே மற்றும் யோகா பயிற்சிகள் எடுத்து வந்த நிலையில் கராத்தே மாஸ்டர் லோகநாதனை கடந்த 13ஆம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்ததோடு காணாமல்போன லோகநாதன் தேடி வந்தனர். லோகநாதன் வைத்திருந்த செல்போனில் அவருடன் இறுதியாக பேசியது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர் காரனை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் -கஸ்தூரி தம்பதியிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது.

சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்த விசாரித்தபோது யோகா மாஸ்டர் லோகநாதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட பகீர் தகவல் வெளிவந்தது. செம்மஞ்சேரி பூங்காவில் வைத்து லோகநாதன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கராத்தே, யோகா பயிற்சிகளை  கொடுத்து வந்த நிலையில் சுரேஷ்-கஸ்தூரி தம்பதியின் 11 வயது மகன் லோகநாதனிடம் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டு பயிற்சி எடுத்து வந்தான். அதே நேரம் கஸ்தூரியும் அவரிடம் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

இந்நிலையில் கஸ்தூரியிடம் லோகநாதன் பாலியல் ரீதியாக தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் லோகநாதனின் பயிற்சி வகுப்புக்கு செல்வதை கஸ்தூரி தவிர்த்து வந்துள்ளார். ஆனால் இருப்பினும் மொபைல் மூலம் கஸ்தூரியை தொடர்பு கொண்ட லோகநாதன் யோகா வகுப்புக்கு வரும்படி தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஸ்தூரி இதுகுறித்து கணவரிடம் தெரிவிக்க இருவரும் சேர்ந்து கராத்தே மாஸ்டர் லோகநாதன் கொலை செய்ய திட்டமிட்டனர்.

அவரை மொபைல் மூலம் தொடர்புகொண்டு காரனை பகுதிக்கு வரவழைத்து அடித்து கொலை செய்ததோடு அங்குள்ள பாழடைந்த கிணற்றில் உடலை வீசிவிட்டுச் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் இருந்த லோகநாதனின் உடலை கயிறு மூலம் கட்டி வெளியே கொண்டு வந்தனர். யோகா மாஸ்டர் அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.