Skip to main content

சொத்து தகராறில் முட்டுக்கட்டை: சித்தப்பா, சித்தியை கொலை செய்த கல்லூரி மாணவர்! 

Published on 07/05/2021 | Edited on 07/05/2021

 

krishnagiri incident college student arrested police investigation

 

கிருஷ்ணகிரியில், பூர்வீக சொத்தைப் பிரித்துக்கொடுப்பதில் முட்டுக்கட்டையாக இருந்ததால் சித்தப்பா, சித்தி இருவரையும் கத்தியால் சரமாரியாக குத்திக்கொன்ற கல்லூரி மாணவரையும், அவருடைய நண்பரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம், வீரப்பன் நகரைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவருக்கு இளங்கோவன் (வயது 58), புகழேந்தி (வயது 55), கரிகாலன் (வயது 50) ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். மூவருக்கும் திருமணமாகி, அதே பகுதியில் தனித்தனியாக குடும்பத்துடன் வசிக்கின்றனர். மூவரும் கார்ப்பெண்டர் வேலை செய்துவருவதோடு, சொந்தமாக வீடு அருகே பெட்டிக்கடையும் வைத்துள்ளனர்.

 

இவர்களுடைய தந்தை ராஜகோபால், ஏற்கனவே இறந்துவிட்டார். அதே பகுதியில், அவருடைய பெயரில் 3 ஆயிரம் சதுர அடி காலி வீட்டு மனை உள்ளது. தந்தை மறைவுக்குப் பிறகு இந்த நிலத்தைப் பிரித்துக்கொள்வதில் அண்ணன், தம்பிகளிடையே தகராறு இருந்து வருகிறது.

 

இந்த நிலத்தின் ஒரு பகுதியில் புகழேந்தி தேநீர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், புதன்கிழமை (மே 5), இந்த நிலம் தொடர்பாக சகோதரர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாய் வார்த்தைகள் எல்லை மீறிப்போகவே, அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானப்படுத்தி விலக்கிவிட்டனர்.

 

சொத்து தகராறு தொடங்கியதில் இருந்தே இளங்கோவன் வீட்டில் தினமும் கணவன், மனைவி இடையே தகராறு நடந்து வந்துள்ளது. சொத்து பிரித்துக்கொள்வதில் புகழேந்தி மட்டும் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்துள்ளார்.

 

இளங்கோவனுக்கு லோகேஷ் (வயது 19) என்ற மகன் உள்ளார். அவர், கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தன் தந்தையின் நிம்மதியற்ற நிலைக்குத் தனது சித்தப்பா புகழேந்திதான் காரணம் என்றும், அவரை தீர்த்துக்கட்டிவிட வேண்டும் என்றும் லோகேஷ் தீர்மானித்துள்ளார்.

 

இதையடுத்து லோகேஷ் (வயது 19), அவருடைய நண்பரான காவேரிப்பட்டணம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் சதீஷ் (வயது 19) என்பவரை அழைத்துக்கொண்டு, நள்ளிரவுக்கு மேல், புகழேந்தியின் வீட்டுக்குச் சென்று கதவை தட்டியுள்ளனர். தொடர்ந்து கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கதவை திறந்து புகழேந்தி வெளியே வந்தார். 

 

அவரை, கண்ணிமைக்கும் நேரத்தில் லோகேஷ், சதீஷ் ஆகிய இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினர். அவரின் அலறல் சத்தம் கேட்டு மனைவி பப்பி ராணி (வயது 45) வெளியே ஓடி வந்தார். அவரையும் சரமாரியாக கத்தியால் குத்தினர். இந்தக் கொடூர தாக்குதலில் கணவன், மனைவி இருவரும் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.

 

இந்தக் களேபரத்தால் பதற்றத்துடன் வெளியே வந்த பக்கத்து வீட்டில் வசித்து வரும் லோகேஷின் மற்றொரு சித்தப்பாவான கரிகாலன், சித்தி சரஸ்வதி (வயது 42) ஆகியோர் மீதும் கத்திக்குத்து தாக்குதல் நடத்தினர். இதில் கணவன், மனைவி இருவரும் பலத்த காயம் அடைந்தனர். கூட்டம் கூடுவதை அறிந்த அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுவிட்டனர்.

 

இச்சம்பவம் குறித்தும், கொலையாளிகள் தப்பிச்சென்றது குறித்தும் கிருஷ்ணகிரி நகர காவல் நிலைய காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில், பெங்களூரு சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த சதீஷ், லோகேஷ் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் அந்த வழியாக ரோந்து சென்ற காவல்துறையினர் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அவர்கள் அணிந்திருந்த உடையில் ரத்தக்கறை படிந்திருந்தது. மேலும், முன்னுக்குப் பின் முரணாகவும் பேசினர். விசாரணையில், அவர்கள்தான் மேற்படி சம்பவத்தில் கொலையாளிகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை ரோந்து காவல்துறையினர் கிருஷ்ணகிரி நகர காவல் நிலைய காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

 

இதற்கிடையே, சடலங்களை மீட்ட காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

கைது செய்யப்பட்ட கொலையாளிகளிடம் நடத்திய விசாரணையில், லோகேஷின் பெற்றோருக்கு தாத்தா சொத்தைப் பிரித்துக்கொடுப்பதில் புகழேந்தி இடையூறாக இருந்ததால் அவரையும், தடுக்க வந்ததால் அவருடைய மனைவியையும் கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரும் நீதிமன்ற உத்தரவின்பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

யோகா மாஸ்டர் அடித்து கொலை; விசாரணையில் பகீர்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

கராத்தே மாஸ்டர் காணாமல் போன சம்பவத்தில், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது  சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலுள்ள கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் அந்த பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கராத்தே மாஸ்டராகவும், யோகா மாஸ்டராகவும் பணியாற்றி வந்தார். இவரிடம் பல்வேறு குழந்தைகள் கராத்தே மற்றும் யோகா பயிற்சிகள் எடுத்து வந்த நிலையில் கராத்தே மாஸ்டர் லோகநாதனை கடந்த 13ஆம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்ததோடு காணாமல்போன லோகநாதன் தேடி வந்தனர். லோகநாதன் வைத்திருந்த செல்போனில் அவருடன் இறுதியாக பேசியது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர் காரனை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் -கஸ்தூரி தம்பதியிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது.

சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்த விசாரித்தபோது யோகா மாஸ்டர் லோகநாதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட பகீர் தகவல் வெளிவந்தது. செம்மஞ்சேரி பூங்காவில் வைத்து லோகநாதன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கராத்தே, யோகா பயிற்சிகளை  கொடுத்து வந்த நிலையில் சுரேஷ்-கஸ்தூரி தம்பதியின் 11 வயது மகன் லோகநாதனிடம் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டு பயிற்சி எடுத்து வந்தான். அதே நேரம் கஸ்தூரியும் அவரிடம் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

இந்நிலையில் கஸ்தூரியிடம் லோகநாதன் பாலியல் ரீதியாக தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் லோகநாதனின் பயிற்சி வகுப்புக்கு செல்வதை கஸ்தூரி தவிர்த்து வந்துள்ளார். ஆனால் இருப்பினும் மொபைல் மூலம் கஸ்தூரியை தொடர்பு கொண்ட லோகநாதன் யோகா வகுப்புக்கு வரும்படி தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஸ்தூரி இதுகுறித்து கணவரிடம் தெரிவிக்க இருவரும் சேர்ந்து கராத்தே மாஸ்டர் லோகநாதன் கொலை செய்ய திட்டமிட்டனர்.

அவரை மொபைல் மூலம் தொடர்புகொண்டு காரனை பகுதிக்கு வரவழைத்து அடித்து கொலை செய்ததோடு அங்குள்ள பாழடைந்த கிணற்றில் உடலை வீசிவிட்டுச் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் இருந்த லோகநாதனின் உடலை கயிறு மூலம் கட்டி வெளியே கொண்டு வந்தனர். யோகா மாஸ்டர் அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.