krishnagiri district

கிருஷ்ணகிரியில் காட்டுப்பன்றியை வேட்டையாடவெடி வைக்க முயன்றவர் அதே வெடியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே திம்மராயப்பாஎன்பவர் காட்டுப்பன்றியை வேட்டையாட வெடி வைக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக காட்டுப்பன்றிக்காக வைக்கப்பட்ட வெடி வெடித்ததில் சம்பவ இடத்திலேயே திம்மராயப்பா உயிரிழந்துள்ளார். அவருடன் சேர்ந்து வெடி வைக்க முயன்ற சேகர் என்பவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.காட்டுப்பன்றிக்காக வெடி வைத்த நிகழ்வில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.