Skip to main content

செல்போனில் அரட்டை: அரசு பேருந்து ஓட்டுநர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்!

Published on 03/12/2019 | Edited on 03/12/2019

கைபேசியில் பேசியபடியே பேருந்தை இயக்கியதாக வந்த புகார்களின் பேரில், அரசுப்பேருந்து ஓட்டுநர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.


கிருஷ்ணகிரியில் இருந்து கந்திக்குப்பம் நோக்கி கடந்த நவ. 19ம் தேதி, அரசு நகரப்பேருந்து சென்றது. அந்தப் பேருந்தை கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ஓட்டுநர் சங்கர் ஓட்டிச்சென்றார். 

KRISHNAGIRI GOVT BUS DRIVERS CELL USING TO DRIVING SUSPENDED

கந்திக்குப்பம் அருகே சென்றபோது, ஓட்டுநர் சங்கர் தனது கைபேசியில் பேசியபடியே பேருந்தை இயக்கினார். இதைப் பார்த்த போக்குவரத்து அதிகாரிகள், இதுகுறித்து சேலம் கோட்ட போக்குவரத்து உயரதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதையடுத்து ஓட்டுநர் சங்கர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.


அதேபோல், மேட்டூரில் இருந்து தர்மபுரிக்கு பேருந்து இயக்கிய ஓட்டுநர் ஜெய்சங்கர் என்பவரும் பணி நேரத்தில் கைபேசியில் பேசிக்கொண்டு அலட்சியமாக செயல்பட்டார். அதுகுறித்து புகாரின்பேரில் அவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

பட்டப்பகலில் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு; போலீசார் விசாரணை

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
In broad daylight, someone poured petrol and set it on fire; Police investigation

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டப்பகலில் சித்தப்பா மீது மகனே பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்து உள்ள சவரக்கோட்டை பிரிவு பகுதியில் வசித்து வருபவர் வடமலை. அவருடைய மகன்கள் சின்னவன் மற்றும் மணி. மணியின் மகன் செந்தில். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக செந்தில் அவருடைய விவசாய நிலத்தில் அறுவடை பணிக்காக டிராக்டரில் சென்றுள்ளார். அப்பொழுது சித்தப்பா சின்னவன் மற்றும் செந்தில் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இது தொடர் பிரச்சனையாக இருந்து வந்த நிலையில் இருதரப்பினரும் காவேரிப்பட்டினம் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சித்தப்பா சின்னவன் தீவனக்கடை ஒன்றில் இருந்த பொழுது கடைக்குச் சென்ற செந்தில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி பற்ற வைத்தார்.

இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த சின்னவனை அங்கிருந்தவர்கள் நேற்று தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பட்டப்பகலில் ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.