Skip to main content

7 மாத கைக்குழந்தையுடன் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை! 

Published on 27/10/2021 | Edited on 27/10/2021

 

krishnagiri district women incident police investigation

 

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே உள்ள நாட்றாம்பாளையத்தைச் சேர்ந்தவர் அய்யாத்துரை. இவருடைய மகன் வெங்கடேஷ் (வயது 30), தனியார் நிறுவன தொழிலாளி. 

 

இவருடைய மனைவி தீபா (வயது 26). இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மேலும், 3 வயதில் வர்ணிதா மற்றும் 7 மாதத்தில் தனுஸ்ரீ என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.

 

வெங்கடேஷுக்கும் தீபாவுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இதனால் கடும் மன அழுத்தத்தில் இருந்த தீபா, அக். 25ஆம் தேதியன்று, உரிகம் கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி கணவரிடம் கேட்டுள்ளார். அதற்கு வெங்கடேஷ், வரும் வெள்ளிக்கிழமை (29.10.2021) அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார். 

 

இந்நிலையில், சிறுமி வர்ணிதாவை வீட்டில் தூங்க வைத்துவிட்டு கைக்குழந்தை தனுஸ்ரீயுடன் தீபா திடீரென்று மாயமானார். மாமியார் தங்கம்மா மருமகளையும், பேத்தியையும் பல இடங்களில் தேடிப் பார்த்தார். இதனால் பதற்றமடைந்த அவர், தன் மகனிடமும் அக்கம்பக்கத்தில் உள்ள உறவினர்களிடமும் தீபாவும், கைக்குழந்தையும் காணாமல் போனது குறித்து கூறியதன்பேரில் அனைவரும் பல இடங்களிலும் தேடினர். ஆனால் எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. 

 

சந்தேகத்தின்பேரில் அந்த ஊரில் உள்ள ஒரு கிணற்றில் தேடிப் பார்த்தபோது தீபா மற்றும் தனுஸ்ரீ இருவரின் சடலங்கள் கிடப்பது தெரியவந்தது. 

 

இதுகுறித்து தகவல் அறிந்த அஞ்செட்டி காவல்நிலைய காவல்துறையினர், சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

தீபா, முதலில் குழந்தையைக் கிணற்றில் வீசிக் கொன்றுவிட்டு, அதன்பிறகு தானும் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறை கருதுகிறது. 

 

இது ஒருபுறம் இருக்க, தீபாவின் தந்தை கிருஷ்ணன், அஞ்செட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், தனது மகளின் சாவில் சந்தேகம் உள்ளதாகவும், தனது மகளிடம் வரதட்சனைக் கேட்டு வெங்கடேஷ் சித்ரவதை செய்ததாகவும், அதனால் அவர் விரக்தியடைந்து குழந்தையுடன் தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். 

 

இதையடுத்து காவல்துறையினர், சந்தேக மரண வழக்காக பதிவுசெய்து இச்சம்பவம் குறித்து விசாரித்துவருகின்றனர். வெங்கடேஷுக்கும், தீபாவிற்கும் திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால், இதுகுறித்து தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி கிருத்திகா நேரடியாக விசாரணை நடத்திவருகிறார். ஓசூர் ஆர்டிஓ நிசாத் கிருஷ்ணாவும் விசாரணை நடத்திவருகிறார். கைக்குழந்தையுடன், இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

யோகா மாஸ்டர் அடித்து கொலை; விசாரணையில் பகீர்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

கராத்தே மாஸ்டர் காணாமல் போன சம்பவத்தில், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது  சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலுள்ள கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் அந்த பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கராத்தே மாஸ்டராகவும், யோகா மாஸ்டராகவும் பணியாற்றி வந்தார். இவரிடம் பல்வேறு குழந்தைகள் கராத்தே மற்றும் யோகா பயிற்சிகள் எடுத்து வந்த நிலையில் கராத்தே மாஸ்டர் லோகநாதனை கடந்த 13ஆம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்ததோடு காணாமல்போன லோகநாதன் தேடி வந்தனர். லோகநாதன் வைத்திருந்த செல்போனில் அவருடன் இறுதியாக பேசியது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர் காரனை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் -கஸ்தூரி தம்பதியிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது.

சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்த விசாரித்தபோது யோகா மாஸ்டர் லோகநாதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட பகீர் தகவல் வெளிவந்தது. செம்மஞ்சேரி பூங்காவில் வைத்து லோகநாதன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கராத்தே, யோகா பயிற்சிகளை  கொடுத்து வந்த நிலையில் சுரேஷ்-கஸ்தூரி தம்பதியின் 11 வயது மகன் லோகநாதனிடம் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டு பயிற்சி எடுத்து வந்தான். அதே நேரம் கஸ்தூரியும் அவரிடம் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

இந்நிலையில் கஸ்தூரியிடம் லோகநாதன் பாலியல் ரீதியாக தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் லோகநாதனின் பயிற்சி வகுப்புக்கு செல்வதை கஸ்தூரி தவிர்த்து வந்துள்ளார். ஆனால் இருப்பினும் மொபைல் மூலம் கஸ்தூரியை தொடர்பு கொண்ட லோகநாதன் யோகா வகுப்புக்கு வரும்படி தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஸ்தூரி இதுகுறித்து கணவரிடம் தெரிவிக்க இருவரும் சேர்ந்து கராத்தே மாஸ்டர் லோகநாதன் கொலை செய்ய திட்டமிட்டனர்.

அவரை மொபைல் மூலம் தொடர்புகொண்டு காரனை பகுதிக்கு வரவழைத்து அடித்து கொலை செய்ததோடு அங்குள்ள பாழடைந்த கிணற்றில் உடலை வீசிவிட்டுச் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் இருந்த லோகநாதனின் உடலை கயிறு மூலம் கட்டி வெளியே கொண்டு வந்தனர். யோகா மாஸ்டர் அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.