Advertisment

நோயாளியை சக்கர நாற்காலியிலிருந்து தள்ளிய விவகாரம்! -அறிக்கையளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு!

chennai high court

கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரை, சக்கர நாற்காலியில் இருந்து மருத்துவமனை ஊழியர் இடித்து தள்ளியுள்ளார். அதன் வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவி வந்தன. இதையடுத்து, அந்த ஊழியரை சஸ்பெண்ட் செய்து மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

இது தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

Advertisment

இந்த விவகாரம் தொடர்பாக, மூன்று வாரங்களில் விரிவான அறிக்கை அளிக்க தமிழக ஊரக சுகாதாரம் மற்றும் மருத்துவப் பணிகள் துறை இயக்குநருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

hospital govt Krishnagiri chennai high court
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe