Skip to main content

கிணற்றுக்குள் விழுந்த யானைக்குக் கால் எலும்பு முறிவு; மருத்துவர்கள் தீவிர சிகிச்சை!

Published on 06/04/2020 | Edited on 06/04/2020


கிருஷ்ணகிரி அருகே, யானைக் கூட்டத்தில் இருந்து தனியாகப் பிரிந்து சென்ற ஆண் யானை, கிணற்றுக்குள் தவறி விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.அதற்கு வனத்துறை மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மேலுமலை பகுதிக்குள் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.அடிக்கடி இப்பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் யானைகள் முகாமிடுவதும்,கிராம மக்கள் விரட்டியடிப்பதும் தொடர்கதையாக உள்ளது.கடந்த பத்து நாள்கள் முன்பு மேலுமலை பகுதிக்குள் யானைகள் கூட்டமாக இருந்தன.அதில் இருந்து தனியாகப் பிரிந்து சென்ற ஆண் யானை ஒன்று,தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே வந்தது.அங்கு மலை அடிவாரத்தில் இருந்த யானை,ஒரு கிணற்றில் தவறி விழுந்தது. 

இதில் யானையின் இடப்புறப் பின்பக்கக் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. யானையின் பிளிறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் கிணற்றடியில் வந்து பார்த்தபோது, அங்கே யானை உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பது தெரிந்தது. கோடைக்காலம் என்பதால் கிணறு தண்ணீறின்றி வறண்டு இருந்தது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர். 
 

krishnagiri district elephant incident doctors and forest officers


வனத்துறையினர் சம்பவ இடம் விரைந்து சென்று, அந்த யானையைக் கிணற்றுக்குள் இருந்து பத்திரமாக மீட்டனர்.இதையடுத்து, அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது.மேலுமலையில் உள்ள கூட்டத்திற்குச் செல்லாமல் தனியாகச் சுற்றி வந்த அந்த யானை,கிருஷ்ணகிரி அணையின் பின்புறம் துடுகனஹள்ளி கிராமத்தின் அருகே திம்மராயனஹள்ளி பகுதிக்குச் சென்றது. 


அங்குப் போதுமான உணவு கிடைக்காததால்,பின்னர் அந்த யானை அப்பகுதியில் உள்ள மாரியப்பன் என்பவரின் மாந்தோப்பில் புகுந்தது.மாம்பழ சீசன் என்பதோடு, நிழல் தரும் தோப்பும் கிடைத்ததால் அங்கேயே முகாமிட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர்.மிக சோர்வாகக் காணப்பட்டதால்,அந்த யானைக்கு குடிக்கத் தண்ணீர் கொடுத்தனர். அத்துடன் பழங்கள், வாழைத்தார்,தென்னை மர ஓலைகள் ஆகியவையும் உணவாக வழங்கப்பட்டன. 

கிருஷ்ணகிரி மாவட்ட வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினரும் அங்கு வந்தனர். அவர்கள் யானையின் காயம்பட்ட கால் பகுதியில் வலி நிவாரணி ஊசி மருந்தைத் துப்பாக்கி தோட்டா போல சுட்டுச் செலுத்தினர்.நான்கு வலி நிவாரணி ஊசிகள் இவ்வாறு செலுத்தப்பட்டது. 

இதையடுத்து யானை சற்று வலி குறைந்து,உற்சாகம் ஆனது.மேலும், பழங்களிலும் மருந்துகளைத் திணித்துச் சாப்பிடக் கொடுத்தனர்.கோடைக்காலம் என்பதால் குடிப்பதற்கும் தொட்டியில் தண்ணீர் வைக்கப்பட்டது.தண்ணீரைப் பார்த்ததும் உற்சாகம் அடைந்த அந்த யானை துப்பிக்கையால் உறிஞ்சி,உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு குளித்து மகிழ்ந்தது.வனத்துறையினர் தொடர்ந்து அங்கேயே முகாமிட்டு யானையைக் கண்காணித்து வருகின்றனர். 

இதுகுறித்து மருத்துவக்குழுவினர் கூறுகையில், ''ஊசி மருந்துகள் மூலம் யானை விரைவில் குணமடைந்து காலை நன்றாக ஊன்றி நடக்கும்.அதன்பிறகு, காப்புக்காட்டுக்குள் பாதுகாப்பாகக் கொண்டு சென்று, மீண்டும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும்,'' என்றனர்.

யானை இருப்பதாகத் தகவலறிந்த சுற்றுவட்டாரக் கிராம மக்கள் ஏராளமானோர் அங்கே வந்து ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

மனைவி கண்முன்னே பாலியல் வன்கொடுமை; திருமணமான பெண்ணின் பரபரப்பு புகார்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
A married woman's sensational complaint on Incident happened in front of wife

கர்நாடகா மாநிலம், பெலகாவி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில், 28 வயது திருமணமான பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அவர் அளித்த அந்த புகாரில், ‘ரஃபீக் என்பவர் அவரின் மனைவியின் கண்முன்னே தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மதம் மாற கட்டாயப்படுத்தியதாகவும்’ புகார் அளித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றம் சாட்டப்பட்ட தம்பதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து பெலகாவி போலீசார் தெரிவிக்கையில், ‘பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2013ஆம் ஆண்டில் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டின் போது, ரஃபீக் என்பவர், அந்த மளிகை கடைக்கு அடிக்கடி வந்துள்ளார். அப்போது, அந்த பெண்ணுக்கும் ரஃபீக்குக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு தெரியவர, தனது மனைவியை கண்டித்துள்ளார். இதில் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராற்றில் கணவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து அந்த பெண், குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது மனைவியுடன் ஒரே வீட்டில் தங்க தொடங்கியுள்ளார். ஆனால், அங்கு, குற்றம் சாட்டப்பட்டவர் தனது மனைவிக்கு முன்னால் அந்த பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அந்த பெண்ணிடம் குங்குமம் வைப்பதற்கு பதிலாக பர்தா அணியுமாறும், ஒரு நாளைக்கு ஐந்து முறை நமாஸ் செய்யுமாறும் அந்த தம்பதியினர் கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அந்த பெண்ணின் கணவரை விவாகரத்து செய்து, இஸ்லாம் மதத்துக்கு மாறி அவர்களுடன் வாழவில்லை என்றால், தனது அந்தரங்க புகைப்படங்களை குடும்பத்தினருக்கும், மற்றவர்களுக்கும் பரப்பி விடுவதாகவும் ரஃபீக் மிரட்டியுள்ளார்’ எனத் தெரிவித்தனர்.

அவரது புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் 376, 503, கர்நாடகா மத சுதந்திர உரிமைச் சட்டம் மற்றும் பிற பிரிவுகளின் கீழ் ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு ரஃபீக் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.