Advertisment

இன்று (30.08.2021) நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிருஷ்ண ஜெயந்தி தினமான இன்று ராயப்பேட்டை கவுடியா மடத்தில் உள்ள கிருஷ்ணர் ஆலயத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட விக்கிரகத்தை பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதேபோல், சென்னையின் பல்வேறு இடங்களிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.