ADVERTISEMENT
ADVERTISEMENT
கரோனா பாதிப்பால் சிகிச்சைப் பெற்று வந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு (72) காலமானார்.
அவரது மறைவைத் தொடர்ந்து தற்பொழுது உயர்கல்வித் துறை அமைச்சராக இருக்கும் கே.பி.அன்பழகனுக்கு வேளாண் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. முதல்வரின் பரிந்துரையை ஏற்று கே.பி.அன்பழகனுக்கு, கூடுதலாக வேளாண்துறை ஒதுக்கீடு செய்யப்படுவதாக ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், தற்பொழுது தலைமைச் செயலகத்தில் கூடுதல் பொறுப்பான வேளாண்துறை அமைச்சராக கே.பி.அன்பழகன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
Show comments