Skip to main content

ஏமாற்றுகிறார் டி.டி.வி.தினகரன்: கே.பி.அன்பழகன் பேச்சு

Published on 20/06/2018 | Edited on 20/06/2018
KP Anbazhagan


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் பென்னாகரத்தில் நடைபெற்றது. 
 

கூட்டத்தில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பேசுகையில், 

 

 

 

தமிழகத்தில் பெரிய திட்டங்களை செயல்படுத்தும் திராணி தி.மு.க.விற்கு கிடையாது. தமிழகத்தில் பெரிய திட்டங்கள் அனைத்தும் அ.தி.மு.க. ஆட்சியிலேயே கொண்டு வரப்பட்டன. தமிழகத்தில் தொடர்ந்து மக்களுக்காக போராடிக்கொண்டிருக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க.தான். அ.தி.மு.க. அரசு தொடர்ந்து சட்டப்போராட்டங்களை நடத்தி காவிரி நதிநீர் ஆணையத்தை அமைக்க செய்வதில் வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆட்சி ஓரிரு மாதங்களில் கவிழ்ந்து விடும் என்று கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக டி.டி.வி.தினகரன் தமிழக மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார். ஜெயலலிதாவின் ஆன்மா இருக்கும் வரை அ.தி.மு.க. அரசை யாராலும் அசைக்க முடியாது என்று கூறினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

Former Minister K.P. Anbazagan appears in court

 

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

கடந்த அதிமுக ஆட்சியில் உயர்கல்வி துறை அமைச்சராக இருந்தவர் கே.பி. அன்பழகன். இதனையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு இருவருக்குச் சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ஆட்சியிலிருந்த போது வருமானத்திற்கு அதிகமாக 45.20 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் இவர் மீதும், இவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் தர்மபுரி குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக 10000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

 

இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்காக தர்மபுரி நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், தனபால் உள்ளிட்ட 11 ஆஜரானார்கள். இதனையடுத்து வழக்கு விசாரணையை டிசம்பர் 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

 

 

Next Story

சி.விஜயபாஸ்கர் மீது புகார்; குற்றப்பத்திரிகை தாக்கல்! 

Published on 22/05/2023 | Edited on 22/05/2023

 

Complaint against C. Vijayabaskar; 10,000 page charge sheet filed!

 

அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மீது சொத்துக்குவிப்பு புகார்கள் எழுந்ததையொட்டி பெரும்பாலான அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் இந்த சோதனை நடந்தது. 

 

இதில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் புதுக்கோட்டை சி.விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடியும், முன்னாள் உயர்க் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ரூ.11.32 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

Complaint against C. Vijayabaskar; 10,000 page charge sheet filed!

 

இந்த நிலையில், இன்று புதுக்கோட்டை, தர்மபுரி மாவட்ட நீதிமன்றங்களில் அவர்கள் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அன்பழகன் மீதான குற்றப்பத்திரிகை 10 ஆயிரம் பக்கங்கள் கொண்டதாக இருந்தது. சி.விஜயபாஸ்கர் மீதான குற்றப்பத்திரிகை 216 பக்கங்கள் கொண்டதாக இருந்தது. இதைத் தொடர்ந்து இனி அடுத்தடுத்த அமைச்சர்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.