Skip to main content

ஓட ஓட விரட்டி பயங்கர ஆயுதங்களுடன் சரமாரியாக தாக்குதல்!! சம்பவ இடத்திலேயே பெயிண்டர் உயிரிழப்பு

Published on 06/08/2020 | Edited on 06/08/2020
Kovilpatti - Painter

 

 

ஓட ஓட விரட்டி பயங்கர ஆயுதங்களுடன் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே பெயிண்டர் உயிரிழந்த சம்பவம் கோவில்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பாரதிநகர் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாடசாமி மகன் கோடீசுவரன். 30 வயதான இவர் பெயிண்டராக உள்ளார். புதன்கிழமை கோவில்பட்டி நடுநிலைப்பள்ளி அருகில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் இவரை வழிமறித்தது. 

 

தன்னை தாக்க வருகிறார்கள் என்று சுதாரித்த கோடீஸ்வரன், அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடினார். பயங்கர ஆயுதங்களுடன் அந்த கும்பல் அவரை விரட்டியது. கோடீஸ்வரனை ஓட ஓட விரட்டிய அந்த கும்பல், அவரை சரமாரியாக வெட்டியது. இதில் நிலைகுலைந்துபோன கோடீஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோடீஸ்வரனை வெட்டி சாய்த்த அந்த கும்பல் சற்று நேரத்தில் அங்கிருந்து தப்பியது. 

 

பட்டப் பகலில் நடந்த இந்த சம்பவம் கோவில்பட்டி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கோடீஸ்வரனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

கோடீஸ்வரன் கடந்த ஓராண்டு முன்பு ராக்கம்மாள் என்பவரை திருமணம் செய்துள்ளார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராக்கம்மாள் தனது பெற்றோர் வீடு உள்ள கடலையூருக்கு சென்றுவிட்டார். 

 

கோடீஸ்வரன் படுகொலைக்கு குடும்ப பிரச்சனை காரணமா, வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதாக என மேற்கு காவல்நிலைய போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த படுகொலை சம்பவ அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உள்ளனர் கோவில்பட்டி நகர மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

சாலையோரத்தில் கருகி உயிரிழந்து கிடந்த இளம் பெண்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
A young woman was burnt to on the roadside; Bagheer information revealed in the investigation

கேரளாவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாலையோரத்தில் இளம்பெண் கருகிய நிலையில் உயிரிழந்த சம்பவத்தில், முறையற்ற தொடர்பால் பெண் கொலை  செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு காங்காட்டுபடி பகுதியைச் சேர்ந்தவர் பிரவியா(31). கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரவியா காணாமல் போன நிலையில் அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் பட்டாம்பி எனும் பகுதிக்கு அருகேயுள்ள சாலையோரத்தில் கருகிய நிலையில் கிடந்த சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அது பிரவியாவின் உடல் என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஆலுரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. ஏற்கெனவே திருமணமான பிரவியா கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். சந்தோஷ் வைத்திருந்த ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார் பிரவியா. அப்பொழுது அவருக்கும் சந்தோஷிற்கும் முறையற்ற தொடர்பு ஏற்பட்டுள்ளது.

சந்தோஷுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் சில நாட்களாக சந்தோஷிடம் பேசாமல் தவிர்த்து வந்துள்ளார் பிரவியா. அந்த நேரத்தில் பிரவியாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வரும் 21ஆம் தேதி திருமணம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சந்தோஷிடம் பேசுவதை முற்றிலுமாக பிரிவியா தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் அவரை கடத்திச் சென்று எரித்து கொலை செய்து, உடலை சாலை ஓரத்தில் வீசிவிட்டுச் சென்றுள்ளார். எப்படியும் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரித்து தன்னைப் பிடித்து வருவார்கள் எனக்கருதிய சந்தோஷ், வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.