Skip to main content

சொத்துப் பிரச்சனை... தாய் மகள்கள் உட்பட 3 பேர் தற்கொலை!

Published on 10/10/2021 | Edited on 10/10/2021

 

kovilpatti incident... police investigation

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர்ப் பகுதியைச் சேர்ந்த முத்துராமன் முத்துமாரி தம்பதியருக்கு யுவராணி, நித்யா என இரு மகள்கள் உள்ளனர். யுவராணி கல்லூரியிலும், நித்யா பிளஸ் 2வும் பயின்று வருகின்றனர். தம்பதியினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் முத்துராமன் 10 வருடங்களுக்கு முன்பே பிரிந்து சென்றுவிட்டாராம். அதனால் கூலி வேலை செய்து முத்துமாரி தன் மகள்களைப் பராமரித்து வந்திருக்கிறார்.

 

இந்தச் சூழலில் நேற்று முத்துமாரியின் வீட்டு காம்பவுண்ட் வெளியே பூட்டப்பட்டிருந்தது. ஆள் நடமாட்டம் தெரியவில்லையாம். அதே சமயம் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை உணர்ந்த அண்டை வீட்டார் போலீசுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள். எஸ்.பி. ஜெயக்குமார், டி.எஸ்.பி. உதயசூரியன் மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் கேட் கதவை உடைத்து உள்ளே சென்றவர்கள் உள்பக்கம் பூட்டப்பட்ட கதவை உடைத்து உள்ளே சென்றபோது, முத்துமாரி ஒரு அறையிலும், யுவராணி நித்யா மற்றொரு அறையிலும் சேலையில் தூக்கில் பிணமாகத் தொங்கியது தெரிய வந்திருக்கிறது. அவர்கள் இறந்து 2 நாட்களுக்கு மேலாகியிருக்கலாம் என்று தெரிகிறது. 

 

மூன்று பேரின் உடல்களைக் கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்விற்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்ட எஸ்.பி. ஜெயகுமார் சம்பவ இடத்தை ஆய்வு செய்திருக்கிறார்.

 

kovilpatti incident... police investigation

 

போலீசாரின் முதற்கட்ட விசாரனையின்போது 3வரின் தற்கொலைக்கு காரணம் சொத்துப் பிரச்சனை எனத் தெரியவந்திருக்கிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன் காலமான முத்துமாரியின் தந்தை தேவராஜ் தன் வீட்டை முத்துமாரிக்கு உயில் எழுதி வைத்திருக்கிறாராம். ஆனால் அந்த வீட்டில் அவரது சகோதரர் ஆண்டவர் வசித்து வருகிறாராம். இருவருக்குமிடையே வீடு தொடர்பாகப் பிரச்சனை ஏற்பட்டு காவல்நிலையம் வரை போய், அங்கே போலீசார் அவர்களை உயில்படி நடந்துகொள்ளுங்கள் என்று இருவரிடமும் அறிவுறுத்தியிருக்கிறார்கள். இருப்பினும் அக்கா, தம்பி இடையே சொத்துப்பிரச்சனைத் தொடர்ந்திருக்கிறது. இந்த நிலையில் முத்துமாரி, யுவராணி, நித்யா மூவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாகத் தெரிகிறது. 

 

வீட்டை உட்புறமாகப் பூட்டியவர்கள் முதலில் யுவராணியும் நித்யாவும் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்கள் இறந்ததை உறுதி செய்த தாய் முத்துமாரி மற்றொரு அறையில் தற்கொலை செய்தது தெரியவந்தது என்கிறார்கள் விசாரணை போலீசார்.

 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மேற்கு காவல்நிலைய போலீசார், தற்கொலைக்கு வேறு காரணங்கள் உள்ளதா எனவும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள்கள் மூவரும் தற்கொலை செய்து கொண்டது கோவில்பட்டி நகரைப் பரபரப்பாக்கியிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.