பள்ளி மாணவர்கள் மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழப்பு!

kovai school clash incident

கோவை அருகே அரசுப் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் ஆலந்துறையில் உள்ள அரசுப் பள்ளியில் படித்துவரும் பிளஸ் 1 மாணவன் நந்தகுமார் மற்றும் உடன் படிக்கும் மாணவர்கள் இடையே நடைபெற்ற மோதலில் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தில் முன்னாள் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட சிறுவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர்.

kovai school
இதையும் படியுங்கள்
Subscribe