Skip to main content

என்னை சீரழித்த பொள்ளாச்சி அஜித்குமார்... பொள்ளாச்சி மாணவி பகீர் புகார்...

Published on 29/03/2019 | Edited on 29/03/2019

பொள்ளாச்சியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் மதுரையை சேர்ந்த இளைஞர் தன்னிடம் முகநூலில் பழகி அதனை தொடர்ந்து திருமணம் செய்து விட்டு கொடுமைபடுத்தி தற்போது விரட்டி விட்டார் எனவும், போதை மருந்து கொடுத்து பாலியல் ரீதியாக சித்ரவதை செய்ததாகவும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.

 

 

பொள்ளாச்சியை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணான இவர் பொள்ளாட்சியில் உள்ள கல்லூரியில் இளநிலை அறிவியல் பயின்றுள்ளார். மாணவிக்கு 2017ம் ஆண்டு முகநூல் மூலமாக அறிமுகமாகியவர் மதுரை மேலூர் கொட்டாம்பட்டியை சார்ந்த இளைஞர் அஜித்குமார்.

 

PROTEST

 

இருவரது பழக்கம் காதலாக மாறியுள்ளது. பலமுறை தனிமையிலும் சந்தித்துள்ளனர். இதனை பயன்படுத்தி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து அதனை படம் பிடித்து அஜித்குமார் மிரட்டியுள்ளார். இதனையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வதாக அந்த மாணவியும் மிரட்டியுள்ளார்.

 

 

இதனை தொடர்ந்து அஜித்குமார் கொட்டாம்பட்டி அழைத்து வந்து உறவினர்கள் முன்னிலையில் கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

 

PROTEST

 

திருமணமான பின்பு மாணவிக்கு பல்வேறு பிரச்சனைகளையும் மற்றும் வரதட்சணை கொடுமையையும் செய்துள்ளார் அஜித்குமார் குடும்பத்தோடு .

 

 

கடந்த இரண்டு மாதாமாக வீட்டில் அடைத்து வைத்து வலுக்கட்டாயமாக மது கொடுத்து குடிக்கச்சொல்லியும், பல நேரங்களில் தன்னை மயக்கமாக்கி என்ன நடந்தது என்றே தெரியாத வண்ணம் அஜித்குமார் செய்ததாக புகார் தெரிவிக்கிறார்.

 

 

மேலும் தற்போது தன்னை வீட்டை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றி விட்டதாகவும், தன்னிடம் இருந்த நகைகளையும் வாங்கியதோடு, அரசியல் கட்சி நண்பர்களை வைத்து மிரட்டுவதாகவும் தெரிவித்தார்.

 

PROTEST

 

கணவரின் குடும்பத்தின் மீது நடவடிக்கை எடுத்து தன்னையும் தன் கணவரையும் மீண்டும் சேர்த்து வைக்க வேண்டுமென காவல்துறையிடம் தெரிவித்தார்.

 

 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம்  புகார் மனு கொடுத்து இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Next Story

‘போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை’ - பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
School Education Department takes action on Action against the protesting teachers

தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள், தங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். அதில் குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர்களின் இந்த போராட்டம், பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை நடந்தது. இதனையடுத்து, தமிழக அரசு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது. 

இந்த நிலையில், 19 நாள்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறியதாவது, ‘சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 8, 2024 வரை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். 

அதில், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் 19 நாள்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். மேலும், 19 நாள்களுக்கு உரிய ஊதியம் மற்றும் பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. .