Skip to main content

பொள்ளாச்சி குற்றவாளிகளை தூக்கில் போடுங்கள்! திருச்சி மாணவர்கள் போராட்டம் ! 

Published on 13/03/2019 | Edited on 13/03/2019

 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் முகநூல் மூலம் மாணவிகள், இளம்பெண்களிடம் பழகி அவர்களை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் வெளியானதால் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் நிதி நிறுவன அதிபர் திருநாவுக்கரசு, என்ஜினீயர் சபரிராஜன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பாலியல் புகார் கொடுத்த மாணவியின் அண்ணனை மிரட்டிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

 

t

 

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

 

இந்த நிலையில் திருச்சியில் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் பகலில் வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரி முன்பு திரண்டனர். பின்னர் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்களை தூக்கில் போட வேண்டும், உண்மையான நபர்களை கைது செய்ய வேண்டும் என கோஷமிட்டபடி மாணவ-மாணவிகள்ஊர்வலமாக டி.வி.எஸ்.டோல்கேட் நோக்கி புறப்பட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் பதாகைகளை ஏந்தியபடி சென்றனர்.

 

இது குறித்து தகவல் அறிந்ததும் கண்டோன்மெண்ட் சரக போலீஸ் உதவி கமிஷனர் மணிகண்டன் மற்றும் கே.கே.நகர் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் மாணவ- மாணவிகளை திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்திற்கு முன்பாக தடுத்து நிறுத்தினர்.

 

t

 

மாணவ-மாணவிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ஊர்வலத்தை கைவிட மறுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து ஊர்வலமாக செல்ல முயன்றனர். மேலும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சட்டக்கல்லூரி மாணவ-மாணவிகளை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். பின்னர் அருகில் உள்ள மண்டபத்தில் அவர்களை தங்க வைத்தனர்.

 

இதில் 34 மாணவிகள் உள்பட மொத்தம் 81 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அனைவரும் பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த போராட்டம் தொடரும் என மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

.இது போன்று ஈ.வே.ரா. பெரியார் கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு வாசலில் குழுமி பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உடனே நீதி வேண்டும் என்றும் மனித மிருங்கள் உடனே தூக்கில் போட வேண்டும் என்று கோஷ்கள் எழுப்பி தங்கள் எதிர்குரல்களை எழுப்பிய பின்பு கலைந்து சென்றனர். இந்த கண்டன ஆர்பாட்டத்தை புரட்சிகார மாணவர்கள் முன்னணி மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.   இதே போல தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

வாக்காளர்களுக்கு பணம்; கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Money for Voters BJP leader caught handed

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி நேற்று நள்ளிரவில் பூலுவப்பட்டியில் உள்ள தேநீர் கடையில் வார்டு வாரியாக ஆலந்துறை பாஜக மண்டல தலைவர் ஜோதி மணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளார்.

இது குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணம் விநியோகம் செய்த பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்த ரூ.81 ஆயிரம் ரொக்கப்பணத்தையும், வாக்காளர் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஏற்கனவே சில வார்டுகளில் பணம் விநியோகம் செய்த நிலையில் மேலும் சில வார்டுகளுக்கு பணம் கொடுக்க முயன்றது தெரிய வந்துள்ளது.