Advertisment

காதல் மனைவியை பயமுறுத்த நினைத்த ஆயுதப்படை காவலருக்கு நேர்ந்த சோகம்!

hang

சிதம்பரத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் கோவை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர் திருவள்ளூரைச் சேர்ந்த கல்பனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கல்பனா கோவை சட்டக்கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வரும் நிலையில், இருவரும் கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் பழையூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கிவந்தனர்.

Advertisment

இந்தநிலையில், ஆனந்தராஜ் திடீரென கல்பனாவிடம் நாம் சிதம்பரத்திலேயே செட்டில் ஆகி விடலாம். நான் ட்ரான்ஸ்பர் வாங்கி விடுகிறேன் என கூறிவந்துள்ளார். ஆனால், சிதம்பரம் கல்பனா வரமுடியாது நாம் கோவையிலேயே இருந்து விடலாம் என மறுத்து வந்துள்ளார். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி இது தொடர்பான வாக்குவாதம் நீடித்து வந்துள்ளது.

Advertisment

இந்நிலையில் நேற்றைய தினம் இரண்டு பேருக்குமிடையில் இதே பிரச்சனை எழுந்துள்ளது. அப்போது கணவருடன் கோபித்துக் கொண்டு கல்பனா வீட்டு வாசலில் போய் அமர்ந்து கொண்டார். அப்போது ஆனந்தராஜ் ‘நான் சொன்னதை கேட்க மாட்டீயா..? நான் தூக்கு போட்டுக்குவேன்.. என பயமுறுத்தி வந்துள்ளார். ஆனால் கல்பனா அதனை கண்டுக்கொள்ளவில்லை.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இதனால், கல்பனாவை பயமுறுத்த எண்ணிய ஆனந்தராஜ், விட்டு ஹாலில் இருந்த மின்விசிறியில் துணியைக் கட்டி அதை தன் கழுத்தில் மாட்டி தூக்கு போடுவது போல நடித்துள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக அவரது கழுத்தில் இருந்த துணி இறுகிவிட்டது.

நீண்ட நேரம் ஆகியும் கணவரிடம் இருந்து எந்த திட்டும் சத்தமும் வரவில்லையே என கல்பனா எதேச்சையாக வீட்டிற்குள் சென்று பார்க்க.. ஆனந்தராஜ் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு கல்பனா அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆனந்தராஜை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஆனந்தராஜ் இன்னும் அபாயக் கட்டத்தில் இருக்கிறார். தன் காதல் மனைவியை பயமுறுத்த கணவன் செய்த நடிப்பு விபரீதமாக முடிந்தது கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

police suicide
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe