Skip to main content

பொள்ளாச்சியில் பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து பணம் பறிக்கும் கும்பல் 

Published on 28/02/2019 | Edited on 28/02/2019

 

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை:   ‘’கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த ஒருவார காலமாக  பெண்களை காதலிப்பது போல் நடித்து ஆபாச வீடியோக்களை எடுத்து அவற்றை வைத்துக்கொண்டு அவர்களுடைய குடும்பத்தாரிடம் கோடிக்கணக்கில் பணம் பறித்த ஒரு கும்பல் அடையாளம் காணப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட ஒரு பெண் தைரியமாக நடந்ததை சொன்ன காரணத்தினால் பொதுமக்கள் நேரடியாக ஈடுபட்டு குற்றவாளிகளை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். 

 

k

 

அந்த குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்லிடப்பேசியிலிருந்து நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ந்துபோய் அதை காவல்துறையிடம் கொடுத்திருக்கிறார்கள். விசாரணையில் பெண்களை காதலிப்பது போல் ஏமாற்றி ஆபாச வீடியோக்கள் எடுத்து அவர்களை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்திருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. அதிகார மையத்தில் இருக்கின்ற பலபேர் இதை பின்னணியிலிருந்து இயக்கியதாகவும் அவர்களுக்கும் இதில் நேரடி தொடர்பு இருப்பதாகவும் தெரிய வருகிறது.

 

அதிகாரத்தில் இருப்பவர்களை காப்பாற்றுவதற்காக காவல்துறை அதிகாரிகள் முயற்சிகள் மேற்கொள்வதை பார்த்து பொள்ளாச்சி மக்கள் கொதித்துப்போய் இருக்கிறார்கள். நடந்திருக்கின்ற நிகழ்வு என்பது தமிழகத்தையே உலுக்குகின்ற ஒரு குற்றம். கொலை குற்றத்தைவிட கொடியது. இதில் சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்ற நினைத்தால் தமிழகத்தில் பெண்கள் பயம் இல்லாமல் நடமாடுவது கேள்விக்குறியாகி போகும். காவல்துறை பாரபட்சம் பாராமல் துரித நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால் பொதுமக்கள் சார்பாகவும், ஆளுங்கட்சி உட்பட அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பாகவும் காவல்நிலையம் முற்றுகையிடப்படும். இதை போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து பல நடந்தாலும் கல்லூரியில் படிக்கின்ற பெண்கள் ஒரு காரணமும் இல்லாமல் மாயையை நம்பி ஏமாறுவது தொடர் நிகழ்வாக இருக்கிறது. இனியும் பள்ளி, கல்லூரிக்கு போகும் பெண்கள் எச்சரிக்கையாக இல்லையென்று சொன்னால் யாரும் காப்பாற்ற முடியாது.’’

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

வாக்காளர்களுக்கு பணம்; கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Money for Voters BJP leader caught handed

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி நேற்று நள்ளிரவில் பூலுவப்பட்டியில் உள்ள தேநீர் கடையில் வார்டு வாரியாக ஆலந்துறை பாஜக மண்டல தலைவர் ஜோதி மணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளார்.

இது குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணம் விநியோகம் செய்த பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்த ரூ.81 ஆயிரம் ரொக்கப்பணத்தையும், வாக்காளர் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஏற்கனவே சில வார்டுகளில் பணம் விநியோகம் செய்த நிலையில் மேலும் சில வார்டுகளுக்கு பணம் கொடுக்க முயன்றது தெரிய வந்துள்ளது.