ADVERTISEMENT

குண்டு வெடிப்பில் கைதாகியுள்ள பாட்ஷாவிற்கு பரோல் தரக்கூடாது!!! -இந்து முன்னேற்ற கழகம்

06:23 PM Apr 29, 2019 | kamalkumar

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகியுள்ள எஸ்.ஏ. பாட்ஷாவின் பரோல் விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படியும், இதுகுறித்து 10 நாட்களுக்குள் விசாரிக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

கோவை குண்டுவெடிப்பில் கைதான பாட்ஷா கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். அவருக்கு பரோல் கேட்டு அவரது மகள் மனு கொடுத்துள்ளார். இலங்கையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ள நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் பரோல் தரக்கூடாது என இந்து முன்னேற்ற கழகத்தின் சார்பில் கோபிநாத் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை ஜூன் 7ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT