கோத்தகிரி பகுதியை சுற்றி 3 கிலோமீட்டர் சுற்றளவில் 7 அரசு மதுபான கடை, 5 தனியார் பார்கள் உள்ளன. இந்நிலையில் குடியிருப்பு நிறைந்த சக்தி மலைச்சாலையில் புதிதாக மேலுமொரு டாஸ்மாக் கடை வர உள்ளதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tasmac_17.jpg)
1300 குடும்ப அட்டைகளை கொண்ட நியாய விலை கடையின் பக்கத்தில் டாஸ்மார்க் கடை வருவதால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதாக குற்றஞ்சாட்டுகின்றனர். இப்பகுதியில் 5 சர்ச்சுகளும், பாலிடெக்னிக் கல்லூரியும், பள்ளிகள் ,அரசு அலுவலங்கள் ஆகியவை உள்ளன. மாவட்ட நிர்வாகம் டாஸ்மார்க் கடை வராமல் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் தவறும்பட்சத்தில் பெரிய அளவில் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
Follow Us