Skip to main content

பிரச்சனைகளுக்குக் காரணம் சாமி குத்தமா? அணுமின் நிலையத்தை மிரட்டும் யானைக்கல் பாறை!

Published on 11/05/2020 | Edited on 11/05/2020

 

Aanaikkal Paarai



"அதை உடைக்காதீங்க! உடைக்காதீங்க! என பல தடவை மன்றாடியும் பலனில்லாமல் உடைச்சீங்க.! அது சும்மா விட்டுச்சா? இப்ப நடக்கின்ற அத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம் அந்த பாறையை உடைச்சதனால் வந்த தெய்வ குத்தமே" என கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு புதியதோர் காரணத்தை அவ்வூரை சேர்ந்த முருக பக்தர்கள் முன் வைத்த நிலையில், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகாவிலுள்ள கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டின் ஒத்துழைப்போடு அணுவினை பிளந்து அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கும் கடந்த பல வருடங்களாக நடைப்பெற்று வருகின்றது. வெறும் அணு உலை மட்டுமல்லாது இந்தப் பகுதியினை அணு உலை பூங்காவாக மாற்ற ஆறு கட்டங்களில் கட்டுமானப் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இந்தக் கட்டுமானப் பணிகளை செய்து வருவது லார்சன் டர்போ நிறுவனம். கடலிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் அதாவது மூன்று மற்றும் நான்காம் பகுதிகளினை யொட்டி யானை ஒன்று அமர்ந்திருப்பது போல் பாறை ஒன்று இயற்கையாகவே அமைந்திருக்க, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டம்  மற்றும் உள்ளூர் மக்கள் அதனை வணங்கி வருவது வழக்கம். அணுமின் நிலைய விரிவாக்கப் பணிகளில் இது உடைபடும் என்பதால், மக்கள் இதனை உடைக்கக் கூடாது என்று போர்க்கொடி உயர்த்திய நிலையில், கடந்த மார்ச் 8ம் தேதி அந்தப் பாறையை உடைத்து தகர்த்துள்ளது ஒப்பந்தம் எடுத்துள்ள லார்சன் டர்போ எனப்படும் L & T நிறுவனம்.

 

 


இது தெய்வ குத்தம் என அனைத்து ஆன்மீக அன்பர்களும் குற்றஞ்சாட்டிய நிலையில் தொழிலாளர் பிரச்சனை, வழக்குகள், வன்முறை என தடுமாறி வருகின்றது கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம். இவ்வேளையில்,  “யானைக்கல் பாறை அது வெறும் பாறை அல்ல. அது எங்கள் வழிபாட்டு தெய்வம், எங்கள் நம்பிக்கை, புராதான சின்னம் என மக்கள் கோரிக்கை வைத்தும் கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது பல தடங்கள்களையும் மீறி மார்ச் 8ம் தேதி யானைக்கல் பாறையை உடைத்தது. அதன் பின்னர், நடக்கின்ற சம்பவங்களை பார்த்தால் கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் பல குளறுபடிகளையும், சிக்கல்களையும், பல பிரச்சனைகளையும் சந்தித்து வருகின்றது. இதற்கு காரணம்! தெய்வீக யானைக்கல் பாறையை தொட்டதே.! இதனால் L&T கம்பெனியும் சொல்லொண்ணா துயரத்தை அடைந்து வருவதும் எங்களுக்கு தெரியவருகின்றது. மக்களின் இறை நம்பிக்கை, தெய்வ சக்தியோடு விளையாடாதீர்கள். பின் வினையை அனுபவிப்பீர்கள். கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் தனது தவறை உணரவேண்டும். திருச்செந்தூர் முருகப் பெருமான் பவனி வந்த யானை பாறையாக மாறியதாகவே மக்கள் இன்றுவரை நம்பி வணங்கி வருகின்றனர். அந்த தெய்வீக யானைக்கல் பாறையை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட வேண்டும். அவ்விடத்தை ஒரு கோவிலாக கட்டி பராமரிக்க வேண்டும். எம் பெருமான் திருச்செந்தூர் முருகன் திருவருளால் அனைவரும் காக்கப்படுவோம்." என கூடங்குளம் தொடங்கி மாவட்டம் ஆன்மிக அன்பர்களிடம் வைரலாக பரவி வருகின்றது.


 

 

Aanaikkal Paarai


 

கூடங்குளத்தினை சேர்ந்த சமூக ஆர்வலர் ரவியோ., "முருகன் - வள்ளி, தெய்வானை திருமணத்தில் கன்னியாகுமரியில் மச்சேந்திரன் எனும் பரத மன்னனின் மகளான பிறந்த தெய்வாணையை திருமணம் செய்ய திருவிளையாடல்கள் நடத்தும் நோக்கில் இந்திரனின் ஐராவதம் யானையில் வைத்து தெய்வாணையை அழைத்து வருகின்றார் முருகக் கடவுள். கூடங்குளம் அருகில் இடிந்தகரை வரும் பொழுது ( புராணத்தில் விடிந்த கரை ) சூரியன் உதித்து இரவுப் பொழுது விடிந்ததால் யானையை அங்கேயே நிறுத்தி வைத்து விட்டு, தெய்வாணைய அழைத்துக் கொண்டு மயில் மீது திருச்செந்தூர் சென்று விடுவார் கடவுள். அந்த ஐராவத யானையே கல்லாக மாறி யானைக்கல் பாறையாய் மாறியது. மாசித்திருவிழாவின் 8ம் நாள் விழாவும், ஆனி மற்றும் ஆடி மாதக் கடைசி வெள்ளிக் கிழமைகளில் இங்கு குளித்து யானைக்கல் பாறைக்கு பூஜை புனஸ்காரங்களை செய்வோம். இப்பொழுது அதற்கு வழியில்லாமல் போய்விட்டது. புனித இடம் அருகில் ஐந்து கிமீ சுற்றளவில் எந்த கட்டிடமும் இருக்கக் கூடாது என்பது உள்ளிட்ட விதிகளையும் அளித்து எத்தனையோ தடவை மன்றாடி பார்த்துவிட்டோம். இப்பொழுது அதனை உடைத்து விட்டனர். அந்த குத்தம்தான் அவங்களை பாடாய் படுத்துது." என்கிறார் அவர். பிரச்சனைகளுக்குக் காரணம் சாமி குத்தமாக  இருக்குமோ..? என பட்டிமன்றத்தை துவங்கி விட்டனர் ஏனைய பொது மக்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நயினார் நாகேந்திரனுக்கு எதிராக வழக்கு; உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Case against Nayanar Nagendran; Trial in the High Court

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றிக் கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும், பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. 

Case against Nayanar Nagendran; Trial in the High Court

இதனையடுத்து நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பினர். அதில் 7 நாள்களுக்குள் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 3 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த சம்மன் அனுப்பப்பட்டது. தாம்பரம் காவல் நிலைய காவலர் சுடலைமுத்து மூலம் நயினார் நாகேந்திரனின் மைத்துனர் துரையிடம் சம்மன் வழங்கப்பட்டது. மேலும், இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை விவரம் (FIR) வெளியாகி இருந்தது. அதில் ரயிலில் எடுத்துச் செல்லப்பட்ட பணம் திருநெல்வேலி வாக்காளர்களுக்கு கொடுக்க என்றும், இந்த பணம் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்றும் கைதானவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக பதிவாகி இருந்தது. முதல் தகவல் அறிக்கையில் கைது செய்யப்பட்டவர்களின் அடையாள அட்டை, பாஜக உறுப்பினர் அட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கைப்பற்றப்பட்ட பணம் தனது பணம் இல்லை என நயினார் நாகேந்திரன் மறுத்த நிலையில், அவரது பணம் என முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

Case against Nayanar Nagendran; Trial in the High Court

இத்தகைய சூழலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். அதில், ‘பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தேர்தலில் இருந்து போட்டியிட தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்றும், “சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை” நடவடிக்கை எடுக்க  வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டுள்ளது. இந்த முறையீட்டை தலைமை நீதிபதி அமர்வு நாளை (18.04.2024) விசாரிக்கிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Next Story

நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு; உயர் நீதிமன்றம் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Case against Nayinar Nagendran High Court action

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில் பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்குத் தேர்தல் நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன் என்பவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை மறைத்து நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதனால், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை நிராகரிக்க கோரிய தன் ஆட்சேபனை மீது முடிவெடுக்கும் வரை தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத,  தகவல்களை மறைத்த வேட்புமனுவை ஏற்றதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை ஏற்றது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “ வாக்குப்பதிவைத் தவிர மற்ற தேர்தல் நடைமுறைகள் முடிந்த நிலையில் தாமதமாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் பாதிக்கப்பட்டிருந்தால் தேர்தல் முடிந்த பின் தேர்தல் வழக்காக தாக்கல் செய்யலாம்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை எதிர்த்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.