Skip to main content

’கொறடாவோ, முதலமைச்சரோ எங்கள் மீது குற்றச்சாட்டு வைக்கவில்லை’ - முதல் நாள் விசாரணையில் டிடிவி தரப்பு வாதம்

Published on 23/07/2018 | Edited on 23/07/2018
mla

 

எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட  வழக்கின் மூன்றாவது நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்னிலையில் முதல் நாள் விசாரணை 
 இன்று நடைபெற்றது. இந்த விசாரணையில்  தகுதி நீக்கம் செய்யபட்ட எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ப்பி.எஸ்.ராமன், அரசு மற்றும் முதல்வர் பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதனும், பேரவை சபாநாயகர், பேரவை செயலாளர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், கொறடா ராஜேந்திரன் தரப்பில் முகுல் ரோஹ்தகி ஆகியோர் ஆஜராக  வாதாடினர் . 


தகுதிநீக்கம் செய்யப்பட்ட  எம்.எல்.ஏ-க்கள் தரப்பு மூத்த வழக்கறிஞர் ப்பி.எஸ்.ராமன்:

சபாநாயகர் உத்தரவு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது மட்டுமல்லாமல், உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. எங்களுடன் சேர்ந்து ஆளுநர் மனு கொடுத்த ஜக்கையனுக்கு ஒரு முடிவு, எங்களுக்கு ஒரு முடிவு என சபாநாயகர் எடுத்துள்ளார். சபாநாயகர் உத்தரவை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியும் என நீதிபதி சுந்தர் தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.

 

தலைமை நீதிபதி அமர்வின் மாறுப்பட்ட தீர்ப்பில் உள்ள மாறுபட்ட கருத்துக்களில் மட்டுமே மூன்றாவது நீதிபதி முடிவெடுத்தால் போதுமென உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்பது தொடர்பாக உள்கட்சியை அணுகவில்லை என முதல்வர் தரப்பில் சபாநாயகரிடம் பதிலளிக்கப்பட்டது. இதன் நகலை எங்களுக்கு வழங்கியிருந்தால் பதில் அளித்திருப்போம். சபாநாயகர் முன்னிலையில் முறையாக தாக்கல் செய்யப்படாத நிலையில் இந்த தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

 

திமுகவுடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டோம் என்பதற்கும் எவ்வித ஆதாரங்களும் இல்லை. ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மீது நாங்கள் மார்ச் மாதம்  கொடுத்த புகாரின் மீது எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. ஆனால் எங்கள் மீது உரிய ஆவணங்கள் இல்லாமல் கொறடா அளித்த புகாரில் அவசர கதியில் உத்தரவிட்டிருப்பதே உள்நோக்கத்தை நிரூபிக்கிறது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் அரசுக்கு எதிராக வாக்களித்து விடுவோம் என  தகுதி நீக்கம் செய்துள்ளனர். ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் அரசுக்கு எதிராக வாக்களிக்க மாட்டோம் என நீதிமன்றத்திலேயே தெரிவித்தோம். ஆளுநரிடம் கடிதம் கொடுத்தபோது அதிமுக ஒன்றே இல்லை. தனித்தனி அணியாகத்தான் இருந்தார்கள். அப்போதைய சூழலில் அதிமுக பெயரை பயன்படுத்தக்கூடாது என தேர்தல்  ஆணையம் உத்தரவிட்டிருந்தது.  

 

எந்த ஒரு  எம்.எல்.ஏ.-வும் மக்களுக்கு பணியாற்றத்தான் விரும்புவார்களே தவிர பதவியை தியாகம் செய்ய விரும்ப மாட்டார்கள். கட்சியை பிளவுபடுத்திய பன்னீர்செல்வம் அணியினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. ஆனால் நாங்கள் கட்சிக்கு எதிராக வாக்களிப்போம் என்று அனுமானத்தின் அடிப்படையிலேயே எங்களை தகுதி நீக்கம் செய்துள்ளனர். இதிலிருந்தே சபாநாயகர் பாரபட்சமாக செயல்பட்டார் என்பது தெரிகிறது.

பன்னீர் செல்வத்திற்கு எதிராக நாங்கள் அளித்த புகாரில் நோட்டீஸ் அனுப்பி இருந்தால் கூட ஆளுனரை சந்திப்பதை நாங்கள் தவிர்த்திருப்போம். முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்பது எங்களுக்கு இரண்டாவது பட்சம்தான், ஆனால் அரசுக்கு எதிராக வாக்களித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் எங்களில் முதல் குற்றச்சாட்டாகும். நாங்கள் ஆட்சிக்கு எதிராக வாக்களிப்போம் என்று ஒருபோதும் சொன்னது கிடையாது. ஆட்சிக்கு எதிராக கட்சிக்கு ஆதரவாக நாங்கள் செயல்படுகிறோம் என்று கொறடாவோ, முதலமைச்சரோ எங்கள் மீது இதுவரை குற்றச்சாட்டு வைக்கவில்லை. சபாநாயகர் மட்டும் தான் அப்படி கூறி வருகிறார்.

 

திமுக உடன் சேர்ந்து ஆட்சியை கலைக்க முயற்சி செய்கிறோம் என்று சொல்வது சபாநாயகர் மட்டும் தான். நாங்கள் ஆளுநரை சந்தித்த அதே நாளிலேயே திமுகவும் சந்தித்ததற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது. எங்கள் மீதான புகாரில் முதல்வரிடம் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்ற எங்கள் தரப்பு வாதத்தையும் சபாநாயகர் ஏற்க மறுத்துவிட்டார். ஆனால் தகுதி நீக்க முடிவெடுக்கும்போது முதல்வர் தரப்பு விளக்கத்தை எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று சொல்லிவிட்டு, அதனடிப்படையிலேயே எங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். கட்சிக்குள் பிரச்சினையை எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என்று கூறுவது சரிதான், ஆனால் நாங்கள் முதல்வரிடம் மற்றும் சபாநாயகரிடம் இந்த விவகாரத்தை எடுத்துச் சென்ற பொழுது அவர்கள் செவிசாய்க்க  மறுத்துவிட்டார்கள் " என வாதத்தை முன் வைத்தார். 

 

இதையடுத்து வழக்கு நாளை விசாரணை  ஜூலை 24க்கு  ஒத்திவைக்கபட்டது. 

சார்ந்த செய்திகள்

Next Story

நிர்மலா தேவி வழக்கு; உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Nirmala Devi case; The High Court barrage of questions

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரிக்கும் வழக்கை பெண் டிஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என புரட்சிகர மாணவர்கள் இளைஞர் முன்னணி இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நிதிபதி சத்திய நாராயண அமர்வில் இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வாதிடுகையில், “பாதிக்கப்பட்ட மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அமைத்துள்ள விசாக கமிட்டிக்கு அனுப்பி இருக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், “பாதிக்கப்பட்ட மாணவிகள் கொடுத்த புகாரை 6 ஆண்டுகளாக விசாக கமிட்டிக்கு ஏன் அனுப்பவில்லை. நிர்மலா தேவி வழக்கில் கடந்த 6 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன். இது குறித்து ஜூன் 7 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்” என மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

Next Story

நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு; உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Case against Nayanar Nagendran High Court action order

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றிக் கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும், பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இதனையடுத்து நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பினர். மேலும், இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை விவரம் (FIR) வெளியாகி இருந்தது. அதில் ரயிலில் எடுத்துச் செல்லப்பட்ட பணம் திருநெல்வேலி வாக்காளர்களுக்கு கொடுக்க என்றும், இந்த பணம் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்றும் கைதானவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக பதிவாகி இருந்தது.

இத்தகைய சூழலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ‘பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்றும், “சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை” நடவடிக்கை எடுக்க  வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது.

Case against Nayanar Nagendran High Court action order

இந்நிலையில் இந்த முறையீட்டு வழக்கை தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நிதிபதி சத்திய நாராயண அமர்வில் இன்று (18.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான நிரஞ்சன், “இந்த பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக தாம்பரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாகவும் வருமான வரித்துறையினருக்கும் தேர்தல் ஆணையத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப்படுகிறது’ எனத் தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் ராகவன் தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்தனர்.