Skip to main content

ஐஐடி மாணவி ஃபாத்திமா ஓடியாடி விளையாடி வளர்ந்த தெருவுக்கு புதிய பெயா்...

Published on 21/11/2019 | Edited on 21/11/2019

ஃபாத்திமாவின் மரணம் அவளின் குடும்பத்தினரை மட்டுமல்ல கொல்லம் நகரத்தையை அதிா்ச்சிக்குள்ளாக்கியது எனலாம்.

 

kollam street to be named after iit student fathima

 

 

இந்த நிலையில் ஃபாத்திமா குடும்பம் வசித்த கொல்லம் கிளிகொல்லூா் நகர குடியிருப்போா் சங்க தலைவா் ஆதம்ராஜ் நம்மிடம் பேசும் போது, "பாத்திமாவால் கிளிகொல்லூா் நகரம் பெருமைப்படும் என்றிருந்தோம். ஆனால் அந்த கனவை சென்னை ஐஐடி சிதைத்து விட்டது. நுழைவு தோ்வில் முதல் ரேங்க் எடுத்த பாத்திமாவுக்கு பெரும் பாராட்டு விழாவை நடத்தி அவளை வாழ்த்தி சென்னைக்கு அனுப்பினோம். 

ஆனால் சென்னை ஐஐடி 4 மாதத்தில் அவளையும், அவளுடைய எதிா்கால கனவையும் பிணமாக்கி திரும்ப கொல்லத்துக்கு அனுப்பிவிட்டது. கிளிகொல்லூா் நகர வித்தியாா்த்திகள் (மாணவா்கள்) பாத்திமாவை ஓரு ரோல் மாடலாக நினைத்து இருந்தனா். அந்தளவு பாத்திமா கல்வி அறிவும், திறமையும், சமூக அக்கறையும் கொண்டவள். இந்தியாவின் உயா்ந்த பதவிக்கு வந்து அந்த பதவி மூலம் அடிமட்டத்தில் இருக்கும் மக்களை உயர கொண்டு வர வேண்டும் என்ற லட்சிய கனவோடு இருந்தவள் பாத்திமா.

அவளுக்குள் இருந்த நல்ல எண்ணத்துக்கு அவளின் பெயா் என்றைக்கும் நிலைத்து நிற்கும் விதமாக அவள் ஒடியாடி விளையாடிய தெருவுக்கு பாத்திமா என்ற பெயரை சூட்டவிருக்கிறோம்" என கூறினாா்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வெளியே சொல்லாததால் தடுக்க முடியவில்லை” - மாணவர்கள் மரணம் குறித்து ஐஐடி விளக்கம்

Published on 14/03/2023 | Edited on 14/03/2023

 

IIT statement on students passed awaIIT statement on students passed awayy

 

சென்னை ஐஐடியில் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த புஷ்பக் ஸ்ரீ சாய் என்ற மாணவர் இன்று விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோட்டூர்புரம் போலீசார் மாணவர் புஷ்பக் ஸ்ரீ சாய் உடலைக் கைபற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

கடந்த மாதம் சென்னை ஐஐடியில் எம்.எஸ். எலெக்ட்ரிக்கல் இன்ஜினீரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த ஸ்டீவன் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது அடுத்த மாதமே மீண்டும் ஒரு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில், சென்னை ஐஐடியில் தரப்பில் இருந்து, “பொருளாதாரம், குடும்பப் பிரச்சனை, மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். பிரச்சனைகளை மாணவர்கள் வெளிப்படுத்தாததால் அவர்கள் தற்கொலை செய்துகொள்வதை தடுக்க முடிவதில்லை” என்று விளக்கம் தரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

Next Story

ஐ.ஐ.டி. இயக்குநர் தமிழக முதலமைச்சருடன் சந்திப்பு

Published on 31/01/2022 | Edited on 31/01/2022

 

madras iit director meet tamilnadu chief minister for today

 

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (31/01/2022) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் (சென்னை ஐ.ஐ.டி.) முனைவர் வி.காமகோடி சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் முதல்வர் பேராசிரியர் கோஷி வர்கீஸ், பதிவாளர் முனைவர் ஜேன் பிரசாத், ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் விக்னேஷ் முத்துவிஜயன் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

 

கிராமப்புற மாணவர்களுக்கு சென்னை ஐ.ஐ.டி. உடன் இணைந்து பயிற்சி வழங்குவது குறித்து முதலமைச்சருடன், ஐ.ஐ.டி. இயக்குநர் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் கூறுகின்றன. 

 

பின்னர் தனியார் செய்தி தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி, "சென்னை ஐ.ஐ.டி.யில் நடக்கும் நிகழ்ச்சிகளில் இனிமேல் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படும். ஐ.ஐ.டி.யில் நேரடி வகுப்புகள் நடத்துவது பற்றி வரும் பிப்ரவரி 15-ஆம் தேதிக்குப் பிறகு முடிவு செய்யப்படும். வருங்காலங்களில் விண்வெளி ஆய்வு, 6ஜி தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்" என்றார்.