Advertisment

வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய எவர்வின் பள்ளி மாணவர்கள் 32 அடி நீளமும் 15 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்ட வாக்குப்பதிவு இயந்திர மாதிரி அமைப்பில், கையில் வாசக பதாகைகள் ஏந்தியவாறு விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்ச்சி சென்னை பெருநகர ஆணையர், ஜி.பிரகாஷ் அவர்கள் தலைமையில் கொளத்தூர் எவர்வின் பள்ளி சார்பில் நடத்துப்பட்டது. இம்முயற்சியில் எவர்வின் பள்ளி குழுமம், தமிழ்நாடு பத்திரிக்கை புகைப்படக் கலைஞர்கள் சங்கமும் இணைந்து நடத்தியது.

Advertisment