கொடநாடு வழக்கு ஒத்திவைப்பு!

kodananu estate case postponted

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணைஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு கோத்தகிரி அடுத்துள்ள கொடநாடு பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றிருந்தது. ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் கார் ஓட்டுநர் கனகராஜ் வாகன விபத்தில் உயிரிழந்தார். தற்பொழுது வரை இந்த வழக்கு தொடர்ந்து உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வாளையார் மனோஜ், ஜித்தின் ஜாய், சயான் மற்றும் ஜம்சீர் அலி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இதையடுத்து புலன் விசாரணைக்காக வெளி மாநிலங்களுக்கு செல்லவேண்டிய சூழல் உள்ளது. மேலும் தொலை தொடர்பு தகவல்களை ஆய்வுக்கு அனுப்பி உள்ளதால் சிபிசிஐடி தரப்பில் இருந்து கால அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி இந்த வழக்கை ஜுலை 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

CBCID kodanadu
இதையும் படியுங்கள்
Subscribe