Kodanadu: Jayalalithaa car driver Kanagaraj brother interrogated ...

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாகார்டிரைவராகஇருந்த கனகராஜின் அண்ணன் தனபாலிடம் ஊட்டிபோலீசார்ஒரு மணி நேரம் ரகசிய விசாரணை நடத்தினர்.

Advertisment

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர்ஜெயலலிதாவுக்குச்சொந்தமானஎஸ்டேட்டில்கடந்த, 2017ஆம் ஆண்டுஏப். 24ம் தேதி கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. அப்போது,எஸ்டேட்காவலாளி ஓம்பகதூர்கொலை செய்யப்பட்டார். இந்தசம்பவத்தைத்தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்தவழக்கில்சயான்,வாளையார்மனோஜ், உதயன், மனோஜ் சாமி,ஜித்தின்ஜாய்,பிஜின்குட்டி,ஜம்சீர்அலி, தீபு,சதீசன், சந்தோஷ் சாமி ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

Advertisment

இதில், கனகராஜ் 2017ஏப்., 28ம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார். கொடநாடு சம்பவத்தில், முக்கியநபராகச்சேர்க்கப்பட்ட கனகராஜ் இறந்ததால்சயான்,வாளையார்மனோஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றச்சாட்டப்பட்டவர்களாகச்சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று மாவட்டகுற்றப்பிரிவுஅலுவலகத்தில் கனகராஜ் அண்ணன் தனபாலிடம், எஸ்.பி.,ஆசிஷ்ராவத், விசாரணை அதிகாரி வேல்முருகன், குன்னூர் டி.எஸ்.பி., சுரேஷ் ஆகியோர் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தி,வீடியோவில்பதிவு செய்தனர்.

அதேவேளையில், கொடநாடு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் மீண்டும் விசாரணை நடைபெறுவதால்அதற்குத்தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில்தீர்ப்பைச்சென்னை உயர்நீதிமன்றம் வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தது.

மேல் விசாரணை நடத்த உள்ளதால், தங்கள் விருப்பப்படி வாக்குமூலம் தரும்படி மிரட்டல் வருவதாகவும், அனுமதி பெறாமலேயே விசாரணை நடப்பதாக ரவி என்பவர்வழக்கைத்தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், கொடநாடு வழக்கில்குற்றம்சாட்டப்பட்டவர்களைக்கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கே மீண்டும் விசாரணை நடத்தப்படுகிறது.எஸ்டேட்உரிமையாளர் சசிகலாவிடம் இன்னும் விசாரணை நடத்தப்படவில்லை.இது குறித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோலீசாரின்மனு நிராகரிக்கப்படவில்லை எனக் கூறப்பட்டது.