Kamal Haasan

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மேற்கு மண்டல தலைமை அலுவலகம் திறப்பு விழா கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்தது.

Advertisment

இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன்,

கொடநாடு சம்பவம் தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டு ஆராயப்பட வேண்டும். தேவைப்பட்டால் மேலிடத்தில் கூறி அதை ஆராய வேண்டும். கொடநாடு, துரோகத்தின் சின்னமாக மாறி உள்ளது. மக்களுக்கும், அவர்கள் தங்களுக்கும் செய்து கொண்ட துரோகத்தின் சின்னமாகதான் இருக்கிறது.

Advertisment

ஏதோ தேர்தல் நெருங்குவதால் அவசரத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறது என்று துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார். அப்படி என்றால் நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அவர் என்ன பதில் கூறுகிறார். இது அவசரத்தில் கூறிய குற்றச்சாட்டு என்று சொல்லக்கூடியது அல்ல. இது தேர்தலுக்காக கூறியது அல்ல. பல ஆண்டுகாலமாக மக்களிடம் எழுந்த குற்றச்சாட்டுதான் இது. எனவே இந்த வி‌ஷயத்தில் அதிகாரிகள் கண்டிப்பாக ஆராய வேண்டும் என்றார்.