Kodanad case Postponement of hearing at the request of the public prosecutor!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.இதுவரை 45க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு, தற்போது வாளையாறு மனோஜ் தவிர மற்ற அனைவரும் ஜாமீனில் உள்ளனர். வாளையாறு மனோஜுக்கு யாரும் உத்தரவாதம் அளிக்காததால் அவர் குன்னூர் கிளைச் சிறையில் உள்ளார்.

Advertisment

இந்நிலையில், இந்த வழக்கின் திருப்புமுனையாக காவல்துறையினர் சயான் மற்றும் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலிடம் மறுவிசாரணை மேற்கொண்டனர்.மேலும், குற்றம் சாட்டப்பட்ட ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, சந்தோஷ் சாமி, சதீசன், பிஜின் குட்டி ஆகியோரிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட்டது.

Advertisment

கடந்த 25ஆம் தேதி கனகராஜின் சகோதரர்களான தனபால் மற்றும் ரமேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். நேற்று (29.10.2021) தனபாலை 5 நாட்கள் காவலில் விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில், கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு நீலகிரி மாவட்டம், உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு சயான், வாளையாறு மனோஜ் மற்றும் உதயகுமார் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

அரசு தரப்பில் சிறப்பு வழக்கிறஞர் ஷாஜகான், அரசு வழக்கறிஞர் ஆனந்த் ஆஜராகினர். விசாரணை தொடங்கியதும் அரசு வழக்கறிஞர்கள், மேல் விசாரணைக்கு நீண்ட நாட்கள் தேவை என வலியுறுத்தினர். அதனை ஏற்ற நீதிபதி சஞ்சய் பாபா, வழக்கு விசாணையை நவம்பர் மாதம் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.மேலும், தனபால் மற்றும் ரமேஷின் ஜாமீன் வழக்கை நவம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Kodanad case Postponement of hearing at the request of the public prosecutor!

வழக்கு விசாரணை முடிந்து வெளியே வந்த அரசு சிறப்பு வழக்கறிஞர் ஷாஜகான், “கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். இதுவரை 45க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கு விசாரணையில் தேவைப்பட்டால் கைது நடவடிக்கை இருக்கும்.விசாரணைக்கு கால அவகாசம் தேவை என கோரப்பட்டது.இதனால், விசாரணை நவம்பர் 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.ரமேஷை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்தனர்.இதனால், 5 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதியளித்தார். தனபால் மற்றும் ரமேஷின் ஜாமீன் மனு மீதான விசாரணை நவம்பர் 2ஆம் தேதி நடக்கும். வழக்கில், மின்னணு தடயங்கள் சேகரிக்கப்பட்டுவருகின்றன.செல்ஃபோன் ஆப்ரேட்டர்களிடம் விசாரணை நடத்த அவகாசம் தேவை” என்று அவர் கூறினார்.