Advertisment

கோடநாடு வழக்கு: ஜம்சீர் அலியிடம் 8 மணி நேரம் விசாரணை!

ரக

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி நள்ளிரவில், ஓம் பகதூர் என்ற பாதுகாவலர் கொலை செய்யப்பட்டு, ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக நீலகிரி மாவட்ட காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிசாரணை நடந்துவருகிறது. அடுத்தக்கட்ட விசாரணை அக்டோபர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு படை அதிகாரிகள், கோடநாடு பங்களாவுக்குச்சென்று விசாரணை செய்துவருகிறார்கள்.

Advertisment

அதேபோன்று இந்த வழக்கு சம்பந்தமான சாட்சிகளிடம் போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுவருகிறார்கள். அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு கூடலூரைச் சேர்ந்த இரண்டு சாட்சிகளிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள். அதை தொடர்ந்து நேற்று (13.09.2021) இந்த வழக்கின் 4வது குற்றவாளியான ஜம்சீர் அலியிடம் காவல்துறையினர் 8 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். இதில் முக்கியமான தகவலை காவல்துறை தரப்பிடம் குற்றவாளி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

kodanadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe