Skip to main content

கோடநாடு விவகாரம்: மீண்டும் விசாரணையைத் தொடங்கியது சேலம் காவல்துறை!

Published on 21/10/2021 | Edited on 21/10/2021

 

Kodanad affair: Salem police resumes probe

 

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் கனகராஜின் மரணம் தொடர்பான வழக்கில், சேலம் மாவட்ட காவல்துறையினர் மேல்விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த 2017- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23- ஆம் தேதி நள்ளிரவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின. இதில் தொடர்புடையதாகக் கூறப்படும் கார் ஓட்டுநரான கனகராஜ், அடுத்த ஐந்து நாள்களில், அதாவது ஏப்ரல் மாதம் 28- ஆம் தேதி சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது கார் மோதியதில் உயிரிழந்தார். 

 

இது தொடர்பான விசாரணை ஆத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று முடிந்தது. கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவரது சகோதரர் தனபால் அதை மறுத்து கனகராஜ் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறியிருந்தார். 

 

இந்த நிலையில், கனகராஜின் மரணம் தொடர்பான வழக்கை காவல்துறையினர் மீண்டும் விசாரித்து வருகின்றனர். இதற்காக சேலம் நீதிமன்றம் மூலம் முறையாக அனுமதி பெற்றுள்ளதாக, சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் தெரிவித்துள்ளார். 

 

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கோடநாடு கொலை, கொள்ளை, அதைத் தொடர்ந்து அரங்கேறிய நான்கு மர்ம மரணங்கள் தொடர்பாக, உதகை காவல்துறையினர் மேல் விசாரணையை நடத்தி வருகின்றன. கனகராஜ் சகோதரர் தனபால் மனைவி, உறவினர்களிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தியிருந்தனர். அவர்கள் அளித்த புதிய தகவல்கள் அடிப்படையில் கனகராஜ் விபத்து வழக்கை காவல்துறை மீண்டும் விசாரித்து வருவதாகத் தெரிகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

2 வருட காதல்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் பரபரப்பு

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Boyfriend lost their life because girlfriend's marriage was arranged with someone else

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது வீட்டு பெரியவர்களின் மூலம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து முதலில் வீட்டை கட்டி முடியுங்கள், பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகட்டும் பணியில் பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள்  வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகாஷ் தனது பெற்றோரிடம் பெண்ணின் வீட்டில் சென்று மீண்டும் திருமணத்திற்கு பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது பெற்றோர் அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.