Skip to main content

கொடைக்கானல் வானிலை ஆய்வு மையத்தின் ஆக்கிரமிப்பு! -திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பதிலளித்திட உத்தரவு!

Published on 04/11/2019 | Edited on 04/11/2019

தனியார் பட்டா நிலங்களை மறித்து கொடைக்கானல் வானிலை ஆய்வு மையத்தில் சுற்றுச் சுவர் கட்டப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பதிலளித்திட உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

 

kodaikanal meterology building case

 

 

கொடைக்கானல், அப்சர்வேட்டரி புதுக்காடையைச் சேர்ந்த சாமுவேல் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில்,  ‘எங்களுக்குச் சொந்தமான 1.55 ஏக்கர் நிலம் அப்சர்வேட்டரி பகுதியில் உள்ளது. இந்த நிலத்தில் நாங்கள் வீடு கட்டியுள்ளோம். மேலும்,  இந்த நிலத்தில் விவசாயமும் செய்து வருகிறோம். இதுபோல்,  மேலும் சிலருடைய பட்டா நிலமும் அங்குள்ளது. எங்கள் நிலத்திற்குச் செல்லும் வழியில்  சுமார் 21 அடியை ஆக்கிரமித்து மறித்து கொடைக்கானல் வானிலை ஆய்வு மையம்  சுற்றுச் சுவர் எழுப்பி வருகிறது. இதனால் நாங்கள் எங்கள் வீட்டிற்குச் செல்ல வழியின்றியும், எங்கள் நிலத்தில் விளையும் பொருட்களைக் கொண்டு செல்லவும் இயலாமல் தவித்து வருகிறோம். எங்கள் நிலத்திற்குச் செல்வதற்கு வேறு பாதைகள் இல்லை. எனவே இந்த சுற்றுச்சுவர் கட்டும் பணியை தடுத்து நிறுத்துவதுடன், எங்கள் நிலத்திற்குச் செல்லும் வழியில் உள்ள 21 அடி பாதையை ஒதுக்கித் தரவும் உத்தரவிட வேண்டும்.’  குறிப்பிட்டிருந்தார்.  

நீதிபதிகள்  சிவஞானம், தாரணி அமர்வு முன் இந்த மனு இன்று  விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு,  வழக்கினை நவம்பர் 19 ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.  

 

 

சார்ந்த செய்திகள்