KN Nehru given patta to public

Advertisment

திருச்சி மாவட்டத்தில் 371 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 18 லட்சம் மதிப்பிலான பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

திருச்சி மேற்குசட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்கள், இலவச வீட்டு மனை பட்டா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வேண்டி நகராட்சிநிர்வாகத்துறைஅமைச்சர் கே.என்.நேருவிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் திருச்சி 25வதுவட்டத்துக்குஉட்பட்ட உய்யக் கொண்டான் திருமலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் அரசுநலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.எ.ன்.நேரு கலந்துகொண்டு 371பயனாளிகளுக்கு, ஒரு கோடியே 18 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டா மற்றும் அரசுநலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Advertisment

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்சிவராசு, மாநகராட்சிமேயர்அன்பழகன், மாநகராட்சி ஆணையர்வைத்தியநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன்,சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், அப்துல்சமது, மத்திய மாவட்ட பொறுப்பாளர்வைரமணிஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.