Skip to main content

கே.என்.நேரு தம்பி ராமஜெயம் நினைவுநாளில் 3 வேட்பாளர்கள்!

Published on 29/03/2019 | Edited on 29/03/2019

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். திருச்சி திருவளர்ச்சோலை அருகே அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த கொலை வழக்கு முதலில் மாநகர போலீசார் விசாரித்தனர். அப்போது திருச்சி காவல்துறை ஆணையராக இருந்த சைலேஸ்குமார் யாதவ், இந்த வழக்கை தனிப்படை அமைத்து விசாரித்தார். 

 

KN Neru brother Ramajayam Memorial day

 

எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் அப்போது டி.ஜி.பி.யாக இருந்த ராமானுஜம் சி.பி.சி.ஐ.டி.க்கு வழக்கை மாற்றினார். சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் முன்னேற்றம் இல்லாத நிலையில், ராமஜெயத்தின் மனைவி லதா சி.பி.ஐ. விசாரணை கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணையின் முடிவில் வழக்கு சி.பி.ஐ. வசம் மாறியது. 
 

சி.பி.ஐ.க்கு மாறி 1 வருடம் ஆகிய நிலையில் ராமஜெயத்தின் 7 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று திருச்சியில் அனுசரிக்கப்பட்டது.

 

ராமஜெயத்தின் நினைவு நாளான இன்று, அவரது சகோதரரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு, திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள தங்கள் குடும்பத்துக்கு சொந்தமான கேர் பொறியியல் கல்லூரியில் இருக்கும் ராமஜெயம் முழு உருவசிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

 

இது நாடாளுமன்ற தேர்தல் நேரம் என்பதால் எப்போதும் இருப்பதைவிட சற்று கூடுதலாக கட்சியினர் திரண்டு இருந்தனர். திருச்சி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர், பெரம்பலூர் ஐ.ஜே.கே. வேட்பாளர் பாரிவேந்தர், சிதம்பரம் தொகுதி வேட்பாளர் திருமாவளவன், ஆகியோர் கலந்து கொண்டு ராமஜெயம் சிலைக்கு மாலை அணிவித்தனர். 

 

வேட்பாளர்கள் அனைவரும் கே.என்.நேருவுடன் ஒரு தனி அறையில் அமர்ந்து தேர்தல் குறித்து விவாதித்தனர். 3 வேட்பாளர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும்போது பாரிவேந்தர், 3 பேரும் ஜெயிப்பதற்கு கேர் எடுத்து வேலை செய்பவர் கே.என்.நேரு. அதனால்தான் அவருடைய கேர் கல்லூரிக்கு வந்திருக்கிறோமென சொல்ல பாரிவேந்தரின் இந்த நகைச்சுவை பேச்சை கேட்டு உண்மைதான் என்று போல் ஆமாம். ஆமாம் என்று தலையாட்டினார்கள். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்னை வெற்றிபெறச் செய்தால் மக்களின் குரலாகப் பாராளுமன்றத்தில் ஒலிப்பேன்” - அருண் நேரு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Arun Nehru says  if he makes me win, he will speak in Parliament as  voice of  people

கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம் பகுதி கொசூர் கடைவீதியில்  பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு பொதுமக்களிடையே வாக்கு சேகரித்துப் பிரச்சாரத்தை கொசூரில் தொடங்கினார்.

பிரச்சாரத்தை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர், “கொசூர் பகுதியில் குடிநீர் பிரச்சனை நீண்ட காலமாக இருப்பதாகத் தகவல் வந்துள்ளது. நிச்சயமாக இந்த பகுதியினுடைய குடிநீர் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும். எனவே திமுக வேட்பாளர் அருணுக்கு வாக்களியுங்கள் என்றார்”. அதைத் தொடர்ந்து வேட்பாளர் அருண் நேரு உற்சாகமாகத் தனது பிரச்சாரத்தை கொசூரில் தொடங்கி, மத்தகிரி, தொண்டமாங்கினம், போத்துராவுத்தன்பட்டி, சிவாயம், பாப்பாக்கப்பட்டி, பஞ்சப்பட்டி ஊராட்சி காகம்பட்டியில் தனது பிரச்சாரத்தை முடித்தார்.

Arun Nehru says  if he makes me win, he will speak in Parliament as  voice of  people

முன்னதாக 16 இடங்களில் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தின் போது, வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது:- கழகத்தின் தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எண்ணிலடங்கா சாதனைகளை செய்திருக்கிறார். உங்களின் உற்சாக வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை போன்ற இளைஞர்களை வெற்றி பெறச் செய்தால் இந்த பகுதி மக்களுடைய குரலாக இருந்து பாராளுமன்றத்தில் உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு  பாடுபடுவேன். மேலும்,  கொசூர் பகுதியில் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதாக அமைச்சர் வாக்குறுதி அளித்திருக்கிறார். அதனை அவர் நிறைவேற்றுவார்.

பஞ்சப்பட்டி ஏரிக்கு மாயனூர் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வர வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. உதயசூரியன் சின்னத்தில் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் பஞ்சப்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரும் கோரிக்கையை நிறைவேற்றுவேன்” என்றார்.

பிரச்சாரத்தின் போது குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்டக் குழு துணைத்தலைவர் தேன்மொழி தியாகராஜன், குளித்தலை ஒன்றியச் செயலாளர் சந்திரன், குளித்தலை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் தியாகராஜன், கிருஷ்ணராயபுரம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் இல. கரிகாலன், முன்னாள் ராணுவத்தினர் பிரிவு மாநிலச் செயலாளர் கேப்டன் சுபாஷ்ராமன் மற்றும் திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்.

Next Story

“வேண்டுமென்றே திட்டமிட்டு மார்பிங் செய்து பரப்பி விட்டுள்ளனர்” - அமைச்சர் எ.வ.வேலு

Published on 30/01/2023 | Edited on 30/01/2023

 

erode by election dmk alliance victory confident minister velu 

 

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக தனது கூட்டணிக் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

 

அமைச்சர் எ.வ.வேலு இன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டதோடு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசுகையில், "ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கிற காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். மதச்சார்பற்ற கூட்டணியில் இருக்கின்ற ஒட்டுமொத்தக் கட்சித் தலைவர்களும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மக்களிடத்தில் நேரடியாகச் சென்று பார்த்தபோது நல்ல வரவேற்பு உள்ளது. திமுகவுக்கு வாக்களிக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர். பெண்கள் வாக்கு திமுகவுக்கு தான். முதலமைச்சர் பெண்களுக்காக பல்வேறு திட்டங்களைத் தீட்டியுள்ளார். புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதாமாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இது எந்த மாநிலங்களிலும் நடக்காத ஒன்று.

 

இத்தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஒன்றரை ஆண்டுக்காலத்தில் பல்வேறு பணிகளைச் செய்துள்ளார். ஈரோடு மாநகரப் பகுதியில் 400 கோடி ரூபாய் அளவுக்கு வளர்ச்சித்திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் தொடர்ந்து நடக்க வேண்டும். அதற்கு ஆளுங்கட்சிக்கு உறுதுணையாக இருப்பவர் எம்எல்ஏவாக இருந்தால் தான் அனைத்து பணிகளும் நடக்கும். எதிர்க்கட்சி சட்டமன்றத் தலைவரால் சட்டமன்றத்தில் கேள்வி மட்டும் தான் எழுப்ப முடியும். அது தவிர அவரால் வேறு ஒன்றும் செய்ய முடியாது. தங்கள் தொகுதிக்கு தேவையான திட்டம் குறித்து அவரால் கேட்க முடியுமா. எனவே திருமகன் ஈவெரா விட்டுச்சென்ற பணிகளை முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்றால் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

 

ஆளுங்கட்சியோடு கூட்டணியில் இருக்கின்ற காங்கிரசுக்கு வாக்களிக்க மக்கள் தெளிவாக உள்ளனர். அதிமுக சார்பாக செங்கோட்டையன் எம்எல்ஏ சட்டமன்றக் கூட்டத்தொடரில் இந்த ஆட்சி குறித்து நல்ல விதமாகத் தான் கூறியுள்ளார். அவர் அந்த கட்சியில் இருப்பதால் தேர்தல் பணியாற்றி வருகிறார். அவருக்கே நன்றாக தெரியும். திமுக கூட்டணியின் காங்கிரஸ் வெற்றிபெற்றால் தான் ஈரோடு மாநகராட்சி வளரும் என்று. நேற்று தோழமைக் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளை அழைத்து ஒருங்கிணைப்பது எப்படி எனப் பேசி இருந்தோம். அப்போது ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், அமைச்சர் நேரு பேசிக்கொண்டிருந்தனர். அமைச்சர் நேரு அவர்கள் நாளை மறுதினம்  செயல்வீரர்கள் கூட்டம் வைத்திருக்கிறோமே. அதற்கு வரும் தலைவர்களுக்கு முறையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்று கேட்டுள்ளார். அதற்கு அமைச்சர் அளித்த பதிலை தவறாகப் புரிந்துகொண்ட விஷமிகள் சிலர் அமைச்சர் நேருவும் இளங்கோவனும் பணம் குறித்து பேசுவதாக சமூக வலைதளங்களில் பரப்பி விட்டனர். அதை நான் கூட கேட்டேன். இதை வேண்டுமென்றே திட்டமிட்டு மார்பிங் செய்து பரப்பி விட்டுள்ளனர். எது செய்தாலும் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி" என்றார்.