Kishore k samy police egmore court order

Advertisment

முன்னாள் முதல்வர்கள் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்து பதிவிட்ட புகாரிலும், பெண் பத்திரிகையாளரை அவமதிக்கும் வகையில் பேசி சமூக வலைதளங்களில் பதிவிட்ட புகாரிலும் கிஷோர் கே சாமி என்பவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் மீது பெண் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் முன்னாள் முதல்வர்கள் குறித்து அவதூறு கருத்துகள் பதிவிட்ட புகாரில் கிஷோர் கே சாமியைக் காவல்துறையினர் ஏற்கனவே கைது செய்த நிலையில், மற்றொரு வழக்கில் அவரை காவல்துறையினர் மீண்டும் கைது செய்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, கைதான கிஷோர் கே சாமியை 14 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.