Skip to main content

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 % இட ஒதுக்கீடு... புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல்!  

Published on 06/12/2020 | Edited on 06/12/2020
 Kiranpedi approves file for 50% reservation in private medical colleges!

 

புதுச்சேரி அரசிடமிருந்து நவம்பர் 29-ஆம் தேதி முதல் டிசம்பர் 05-ஆம் தேதி வரை 42 கோப்புகள் துணை நிலை ஆளுநர் ஒப்புதலுக்காக ராஜ்நிவாஸ்க்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில் பல கோப்புகளுக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.

 

அவைகள் விவரம் வருமாறு,

 

புதுச்சேரி தேர்தல் துறையில் 12 துணை தாசில்தார்கள் தற்காலிகமாக நியமித்தல், ஏனாம் பிராந்தியத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு மத்திய உள்துறைக்கு அனுப்பவேண்டிய பட்டியல், முதியோர் மற்றும் ஆதரவற்ற பெண்கள் 1,54,747 பேருக்கு நவம்பர் மாதத்திற்கான உதவித் தொகையாக ரூபாய் 29.65 கோடி வழங்குதல், ஊர்க்காவல் படை வீரர்களிலிருந்து வருவாய்த்துறையில் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புதல், 2020-21-ஆம் நிதியாண்டில் முதல் மற்றும் இரண்டாவது கால் ஆண்டுகளுக்கு மோட்டார் வாகன வரி விலக்கு அளித்தல் (அதன் மூலம் ஏற்படும் ரூபாய் 21 கோடி வருவாய் பற்றாக்குறையை வேறு வழிகளில் வசூலிக்க கூறப்பட்டுள்ளது),

 

புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடப் புத்தகங்கள் ரூபாய் 10.404 லட்சத்தில் வாங்கியதற்கான செலவினம், மூன்று மாத இலவச அரிசிக்கு பணம் வழங்குதல், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மதுபானங்களுக்கு கோவிட் வரி இரண்டு மாதங்களுக்கு நீட்டித்தல் உள்ளிட்ட  கோப்புகளுக்கு கிரண்பேடி அனுமதி அளித்துள்ளார்.

 

மேலும் புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் சட்ட மசோதாவுக்கு (இடப்பகிர்வு) விரைவில் அனுமதி தர மத்திய உள்துறைக்கு நினைவூட்டும் கோப்பு,  தனியார் சுயநிதி மருத்துவ மற்றும் துணை மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை புதுச்சேரியில் நடைமுறையிலிருக்கும் இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்புவதற்கான கோப்பு ஆகியவற்றுக்கும் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜக காங்கிரஸ் பணம் தருகிறது' - தனி ஆளாக போராட்டத்தில் இறங்கிய சுயேச்சை வேட்பாளர்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'BJP Congress gives money' - Independent candidate goes into the struggle alone

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சியினர் வாக்குக்கு பணம் தருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர், சுயேச்சைகள் என மொத்தமாக 26 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர் மாஸ்கோ என்பவர் காங்கிரஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக இரு கட்சி வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கருப்பு கொடியை ஏந்தியபடி சாலையின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

Next Story

தாமரை வடிவில் அலங்காரம்; புகாரில் சிக்கிய வாக்குச்சாவடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Decoration in the shape of a lotus at the polling station

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாகூர் வாக்குச்சாவடியில் நுழைவு வாயிலில் தாமரை வடிவிலான அலங்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், தற்பொழுது அவை நீக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் 11/23 என்ற எண் கொண்ட வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் பேப்பரால் செய்யப்பட்ட தாமரைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. உடனடியாக இதுகுறித்து திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த தாமரை வடிவிலான பேப்பர் பூக்களை அகற்றினர்.