Skip to main content

கண்டித்தும் கேட்காததால்தான் கொன்றோம்... கூடாநட்பு விவகாரத்தில் கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்

Published on 31/08/2018 | Edited on 31/08/2018
murder


நண்பர் மனைவியுடன் கூடா நட்பு வைத்திருந்தவரை பலமுறை கண்டித்தும் கேட்காததால் அவரை கொலை செய்து கொடைக்கானல் மலையில் இருந்து 1500 அடி பள்ளத்தில் தள்ளிவிட்டதாக கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 
 

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த வெங்கட்ராமன் - வசந்தா தம்பதியினர் மகன் 34 வயதுடைய மணிகண்டன். திருமணம் ஆகாத இவர் டீக்கடையில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 23ஆம் தேதி வழக்கம்போல வேலைக்கு சென்ற இவர் வீடு திரும்பவில்லை. இவரது தாயார் வசந்தா பல இடங்களில் மணிகண்டனை தேடியும் அவரைப் பற்றி சரியான தகவல் கிடைக்கவில்லை. 
 

 

 

இதனைத் தொடர்ந்து, தனது மகன் மணிகண்டன் காணவில்லை. பல இடங்களில் விசாரித்து பார்த்துவிட்டேன். யாரும் தெரியவில்லை என்கிறார்கள் என்று ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் நிலையத்தில்வசந்தா புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்பதால், இன்ஸ்பெக்டர் ரமணி, சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. 
 

பல்வேறு கோணங்களில் விசாரணையில் ஈடுபட்ட போலீசார், மணிகண்டன் செல்போன் வைத்திருந்தாரா, அவரது செல்போன் எண்ணை பெற்று, மணிகண்டனின் செல்போனில் பேசிய நபர்கள் குறித்த பட்டியலை போலீசார் சேகரித்தனர். குறிப்பாக மணிகண்டன் காணாமல் போன அன்று யாருடன் பேசினார் என்பதையும் ஆய்வு செய்தபோது, ஜெய்ஹிந்த்புரம் பாரதியார்புரத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர் பேசியிருப்பது தெரியவந்தது.
 

இதைத்தொடர்ந்து அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் கூடாநட்பு விவகாரத்தில்தான் இந்த கொலை நடந்திருப்பது தெரிய வந்தது. 
 

 

 

கைதான சீனிவாசன், என்னுடைய நண்பர் சரவணன். மதுரை நேரு நகரை சேர்ந்த அவர், ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார். மேலும் தனக்கு தெரிந்தவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வருகிறார். சரவணனுடைய மனைவி வனிதாவுக்கும், மணிகண்டனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இது தொடர்பாக மணிகண்டனையும், வனிதாவையும் சரவணன் கண்டித்தார். இருப்பினும் அவர்களது தொடர்பு நீடித்தது.
 

இதனை சரவணன் என்னிடம் சொல்லி வருத்தப்பட்டார். மேலும் மணிகண்டனை கொலை செய்ய திட்டமிட்ட சரவணன், அதற்காக என்னிடம் உதவி கேட்டார். நான் என்னுடைய நண்பர்களான மதுரை கீரைத்துரையை சேர்ந்த சபரி, வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த மகாராஜன் ஆகியோரிடம் இதனை தெரிவித்தேன். அவர்கள் இருவரின் உதவியோடு மணிகண்டனை கொலை செய்ய நானும், சரவணனும் முடிவு செய்தோம். அதற்கான திட்டங்களை தீட்டினோம். 
 

கொடைக்கானலுக்கு ஜாலியாக சென்று வரலாம் என்று மணிகண்டனை அழைத்தோம். இதனை மறுக்காத மணிகண்டன் வருவதாக கூறியதையடுத்து, கடந்த 24-ந்தேதி மதுரையில் இருந்து மணிகண்டனுடன், நாங்கள் 4 பேரும் ஒரு காரில் கொடைக்கானல் சென்றோம். கொடைக்கானல் பாம்பார்புரம் நீர்வீழ்ச்சிக்கு சென்ற நாங்கள் அனைவரும் மதுபானம் குடித்தோம்.
 

குறிப்பிட்ட தூரம் வரை காரில் சென்ற நாங்கள், அங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரம் வனப்பகுதிக்குள் நடந்து சென்றோம். திடீரென நாங்கள் 4 பேரும் சேர்ந்து மணிகண்டனின் வாயை பொத்தி கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்தோம். பின்னர் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக 1,500 அடி பள்ளத்துக்குள் உடலை வீசி விட்டோம்.
 

 

 

அதன்பிறகு காரில் கொடைக்கானல் பஸ் நிலையம் வந்த நாங்கள், அதே பகுதியில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கினோம். காலையில் எழுந்த நான், அறையில் தங்கியிருந்த சரவணன், சபரி, மகாராஜன் ஆகியோரை காணவில்லை. பின்னர் நானும் கொடைக்கானலில் அறையை காலி செய்துவிட்டு மதுரை வந்து விட்டேன். ஆனால் போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர் என்று சீனிவாசன் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
 

இதற்கிடையே சீனிவாசனை கொடைக்கானலுக்கு போலீசார் அழைத்து வந்தனர். மணிகண்டனின் உடல் வீசப்பட்ட இடத்தை அவர் அடையாளம் காட்டினார். இதனையடுத்து உடலை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சரவணன், சபரி, மகாராஜன் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ரெய்டில் சிக்கிய பிக் பாஸ் டைட்டில் வின்னர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
big boss 17 title winner Munawar Faruqui arrested

சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்த முனாவர் பரூக்கி, ஸ்டாண்ட்-அப் காமெடியனாகவும் ராப் படகராகவும் பிரபலமானார். இவர் 2021 ஆம் ஆண்டில், ஒரு ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சியின் போது இந்து கடவுள்களை பற்றி கருத்து தெரிவித்த நிலையில், இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியததாக அவர் மீது புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதியப்பட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வலது சாரி அமைப்புகளின் அச்சுறுத்தல்களால் தான் நகைச்சுவை துறையிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன் பிறகு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமலிருந்த முனாவர் பரூக்கி, 2022 ஆம் ஆண்டு ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து அதன் முதல் சீசனில் வெற்றி பெற்றார். மேலும் இந்தி பிக் பாஸ் சீசன் 17ல் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.

big boss 17 title winner Munawar Faruqui arrested

இந்த நிலையில், ஹூக்காவில் புகையிலை தொடர்பான காவல்துறையினர் சோதனையில் முனாவர் பரூக்கி கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு மும்பையில் உள்ள கோட்டை பகுதியில் ஹூக்கா பார்லரில் மூலிகை பொருள் என்ற பெயரில் ஹூக்காவில் புகையிலை பயன்படுத்தப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அந்த பாருக்கு சென்ற காவல் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இரவு 10.30 மணியளவில் தொடங்கிய அந்த சோதனை இன்று அதிகாலை 5 மணி வரை தொடர்ந்துள்ளது. 

இந்த சோதனையில் மொத்தம் ரூ. 4,400 ரொக்கம் மற்றும் ரூ.13,500 மதிப்புள்ள 9 ஹூக்கா பானைகள் பறிமுதல் செய்தனர். அந்த சோதனையின் போது 14 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பிக் பாஸ் 17 டைட்டில் வின்னர் முனாவர் பரூக்கியும் ஒருவர். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முனாவர் பரூக்கியிடம், ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றம் என்ற வகையில், நோட்டீஸ் ஒன்றைக் கொடுத்துவிட்டு பின்பு காவல்துறையினர் விடுவித்தனர். இந்த சம்பவம் அங்கு சற்று பரப்பரப்பை ஏற்படுத்தியது.