சேலத்தில் 3 வயது ஆண் குழந்தை காணாமல் போன நிலையில் நடுரோட்டில் விடப்பட்ட ஆண் குழந்தையை போலீசார் மீட்டனர்.

Advertisment

The kidnapped 3 year old child in Salem ...

சேலம் சத்திரத்தை சேர்ந்தவர் பாலாஜி. அவருக்கு3 வயதில் யோகேஸ்வரன் என்ற ஆண்குழந்தை உள்ளது. இன்று காலை வீட்டிற்கு அருகில் விளையாடி கொண்டிருந்த குழந்தை யோகேஷ் காணாமல் போனதை அடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து தேடியும் கிடைக்கவில்லை. இதனால் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

The kidnapped 3 year old child in Salem ...

Advertisment

The kidnapped 3 year old child in Salem ...

இந்தபுகாரின் அடிப்படையில்அந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சியை சோதித்தபோது ஸ்கூட்டியில் வந்த இரண்டு பெண்கள் குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து மூன்று வயது மதிக்கத்தக்க குழந்தை சேலத்தான்பட்டியில் நடுரோட்டில் விட்டுவிட்டு சென்றதால் அழுந்து கொண்டிருப்பதாக தகவல் வர போலீசார் சென்று விசாரித்ததில் அந்த குழந்தை காணாமல் போனசத்திரத்தை சேர்ந்த பாலாஜியின் குழந்தை யோகேஷ் என தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் யார் அந்த பெண்கள் எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.