Skip to main content

சேலம் வழியாகச் சென்ற கேரளா ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்; கடத்தல் ஆசாமி ஓட்டம்!

Published on 10/05/2022 | Edited on 10/05/2022

 

Kerala train passing through Salem POLICE RAID

 

சேலம் வழியாகச் சென்ற கேரளா விரைவு ரயிலில் கடத்திச் செல்ல முயன்ற 8 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப்படையினர் பறிமுதல் செய்தனர்.

 

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு ரயில்களில் கஞ்சா கடத்தி வரப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மற்றொருபுறம், உள்ளூர் ரயில்வே காவல்துறையினர், ரயில்வே பாதுகாப்புப் படையினர் அவ்வப்போது அதிரடி வேட்டை நடத்தி, கஞ்சா கடத்தல் ஆசாமிகளை பிடித்து வருகின்றனர். 

 

இந்தநிலையில், சேலம் ரயில்வே பாதுகாப்புப்படை (ஆர்பிஎப்) பிரிவு ஆய்வாளர் ராஜேந்திரகுமார் மீனா தலைமையில் காவல்துறையினர், சேலம் வழியாக கேரளா செல்லும் தன்பாத் & ஆலப்புழா விரைவு ரயிலில் திங்கள்கிழமை (மே 9) காலை திடீர் சோதனை நடத்தினர். 

 

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து ஏறி ஒவ்வொரு பெட்டியாக சோதனை நடத்தினர். இந்த சோதனை சங்ககிரி  வரை தொடர்ந்தது. சங்ககிரி அருகே சென்றபோது பொதுப்பெட்டியில் கழிப்பறை அருகே  சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு பை இருந்தது. பயணிகளிடம் விசாரித்தபோது அந்தப் பைக்கு உரியவர் யார் என்று தெரியவில்லை. கேட்பாரற்றுக் கிடந்த அந்தப் பையைத் திறந்து பார்த்தபோது அதில் நான்கு பார்சல்கள் இருந்தன. அவற்றைப் பிரித்துப் பார்த்ததில் அதில் 8 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. 

 

கஞ்சா கடத்தி வந்த ஆசாமிகள், காவல்துறையினர் சோதனைக்கு வருவதை அறிந்து அங்கேயே வைத்துவிட்டு தப்பிச்சென்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து 8 கிலோ கஞ்சாவையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 

 

கைப்பற்றப்பட்ட கஞ்சாவை சேலம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் ஒப்படைத்தனர். இப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணையை மேற்கொண்டு உள்ளனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்சி ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Arbitrary seizure of money at Trichy railway station!

திருச்சி ரயில் நிலையத்தில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் ரூ. 1.44 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த ரயிலில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில், இளைஞர் ஒருவர் கட்டுக்கட்டாக பணத்தாள்களை வைத்திருந்தார். அவரிடம் போலீஸார் விசாரித்தபோது,. அவர் மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த நாகவேல்ராஜா (25) என்பதும், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், மளிகை பொருட்கள் அனுப்பிய வகையில், நிலுவையில் இருந்த பணத்தை வசூல் செய்து வந்ததாகவும் தெரிவித்தார். அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 618 ரொக்கத்துக்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை.

இதைத்தொடர்ந்து ரயில்வே போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்து பறக்கும்படை அலுவலர் வினோத்ராஜ் மூலம் திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story

ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

West Bengal Kulti Railway Station fire incident

 

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

 

மேற்கு வங்க மாநிலம் பாஸ்கிம் பர்தமான் மாவட்டத்தில் உள்ள அசன்சோலில் என்ற பகுதியில் குல்டி ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த ரயில் நிலையத்தில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில் நிலையத்தில் தளவாட பொருட்கள் வைத்திருந்த இடத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.