Skip to main content

மழையால் சிக்கி தவிக்கும் கேரளா – விஐடி சார்பில் 1 கோடி நிதியுதவி

Published on 18/08/2018 | Edited on 18/08/2018
v

 

கடும் மழைப்பொழிவால் பெரும் பொருளாதார இழப்பையும், மனித இழப்பையும் சந்தித்து வருகிறது கேரளா மாநிலம். கேரளா முதல்வர் பினராயிவிஜயன் ஆகஸ்ட் 17ந்தேதி அறிவிப்பின்படி, 167 பேர் இறந்துள்ளார்கள் என அறிவித்துள்ளார். இந்நிலையில் ஆகஸ்ட் 19ந்தேதி வரை மழை பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் கேரளா மக்கள் பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் உள்ளனர்.


கேரளா மக்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் வேலை செய்பவர்கள், வயதானவர்கள் மட்டுமே சொந்த ஊரில் உள்ள வீடுகளில் இருப்பார்கள். இதனால் இந்தியாவுக்கு வெளியேவும், கேரளாவுக்கு வெளியேவும் உள்ள மலையாளிகள் தங்களது பெற்றோர்களுக்கு, உறவினர்களுக்கு என்னவானதோ எனத்தெரியாமல் பெரும் கவலையில் சிக்கியுள்ளனர்.


மழையால் வீடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க கேரளா அரசு தன்னால் முடிந்த அத்தனை முயற்சிகளையும் செய்துவிட்டது. பேரிடர் மீட்பு பணி வீரர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். பாதைகள் துண்டிப்பு, மண்சரிவு, மரங்கள் விழுந்தது, வீடுகள் மூழ்கும் அளவுக்கு மழை நீர் தேக்கம் போன்றவற்றால் மீட்பு பணியில் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றனர்.


இந்நிலையில் 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய மோடியரசு வெறும் 100 கோடி ரூபாயை மட்டும் கேரளாவுக்கு வழங்கியுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் கடவுளின் தேசமான கேரளாவுக்கு உதவுங்கள் என சமூக வளைத்தளங்களில் கேரளா மாநில முதல்வரின் வங்கி கணக்கை எண்ணை பகிர்ந்துள்ளனர்.


தமிழகரசு, தமிழக நடிகர்கள் உதவித்தொகை அறிவித்துள்ளனர். பக்கத்து மாநிலமான கேரளாவுக்கு தேவையான உணவுப்பொருள், நிதியுதவியை பொதுமக்களும், அமைப்புகளும் வழங்க துவங்கியுள்ளனர். அதன்படி விஐடி பல்கலைக்கழகத்தின் மாணவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் சார்பில் வேந்தர் விஸ்வநாதன், துணை வேந்தர்கள் சங்கர், செல்வம் போன்றோர் கேரளாவுக்கு நேரடியாக சென்று கேரளா முதல்வர் பினராயிவிஜயனை சந்தித்து ஒருக்கோடிக்கான காசோலையை வழங்கிவிட்டு வந்துள்ளார்கள்.


இதேப்போல் பிற சமூக அமைப்புகளும், தனிமனிதர்களும் கேரளாவுக்கு தங்கள் முடிந்த நிதியுதவி மற்றும் உணவுப்பொருள் உதவியை வழங்கிவருகின்றனர்.
 
 

சார்ந்த செய்திகள்

Next Story

இமெயிலில் வந்த தகவல்; பதறிய விஐடி பல்கலைக்கழகம்

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
 threat to VIT University

வேலூர் காட்பாடி பகுதியில் உள்ளது விஐடி தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகம். 300 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த பல்கலைக்கழகத்தில் சுமார் 30,000-க்கும் மேற்பட்ட உள்நாட்டு - வெளிநாட்டு மாணவ-மாணவியர்கள் பயின்று வருகிறார்கள். லட்சக்கணக்கில் நன்கொடை, கட்டணம் செலுத்துபவர்கள் மட்டுமே இதில் பயில முடியும். நாட்டில் போபால், சென்னை உட்பட வேறு சில இடங்களிலும் வி.ஐ.டி கல்வி நிலையம் செயல்படுகிறது. வேலூர் பல்கலைக்கழகத்தின் மீது அரசு நீர்நிலை பகுதிகள் ஆக்கிரமிப்பு உட்பட சில குற்றச்சாட்டுகள், சர்ச்சைகள் உண்டு.

இந்நிலையில், வேலூர் விஐடி பல்கலைக்கழகத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பதாக கூறப்படுகிறது. விஐடி பல்கலைக்கழகத்தின் இமெயிலுக்கு மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்ததாக விஐடி பல்கலைக்கழகத்தின் மூலம் வேலூர் மாவட்ட காவல்துறைக்கு நேற்று மாலை புகார் அளிக்கப்பட்டது.

வேலூர் மாவட்ட எஸ்பி மணிவண்ணன் தலைமையில் 10 பேர் கொண்ட ஆறு குழுக்கள், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட போலீசார் விஐடி பல்கலைக்கழகத்திற்கு விரைந்து சென்று பல்கலைக்கழகம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர். போலீசார் மற்றும் பல்கலைக்கழகத்தின் தரப்பில் மாணவர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் கூறி வருகின்றனர். நள்ளிரவு வரை தொடர்ந்த சோதனையில் எந்த ஒரு வெடிபொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Next Story

கஞ்சா விற்பனை செய்த விஐடி பல்கலைகழக மாணவர்கள் 8 பேர் கைது!

Published on 12/02/2020 | Edited on 12/02/2020

வேலூர் மாவட்டம், காட்பாடி காவல்நிலைய எஸ்.ஐ ராஜசேகருக்கு, கஞ்சா விற்பனை குறித்து வந்த தகவலின் அடிப்படையில் போலீஸார் பிப்ரவரி 10ந் தேதி பழைய காட்பாடியில் உள்ள ஒரு வீட்டில் நள்ளிரவு அதிரடியாக ரெய்டு நடத்தியுள்ளனர். அந்த ரெய்டில் 12 கிலோ கஞ்சாவுடன் 8 பேர் சிக்கியுள்ளனர். அவர்களிடம் விசாரித்தபோது, 8 பேரும் வேலூரில் பிரபலமாகவுள்ள விஐடி பல்கலைகழகத்தில் படிப்பதாக தகவல் கூறியுள்ளனர். அதனை போலீஸாரும் உறுதி செய்துக்கொண்டுள்ளனர்.

 

Eight students arrested for selling cannabis

 

வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ளது பிரபலமான விஐடி நிகர்நிலை பல்கலைக்கழகம். முன்னாள் அரசியல்வாதியான விஸ்வநாதன் குடும்பத்தாரால் நடத்தப்படுகிறது. இந்த நிகர்நிலை பல்கலைகழகத்தின் கிளைகள் சென்னை, போபால் போன்ற இடங்களிலும் உள்ளன.

இந்த பல்கலைகழகத்தில் சேர தனியாக நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. பெரிய அளவில் கல்வி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பெரும்பாலும் பணக்காரர்கள், அதிகாரத்தில் உள்ளவர்களின் வாரிசுகள் படிக்கும் பல்கலைகழகமாக இருப்பதால் யாரையும் இந்த பல்கலைக்கழகம் கட்டுப்படுத்துவதில்லை. இதனாலயே கஞ்சா விற்பனை செய்து 12 மாணவர்கள் சிக்கியுள்ளார்கள்.

அடிக்கடி இந்த பல்கலைகழகத்தில் பலமுறை மாணவர்களுக்குள் கத்தி குத்துயெல்லாம் நடந்துள்ளன. பல்கலைகழக வளாகத்தில், விடுதியில் மாணவர்கள் தற்கொலை என தகவல்கள் வெளியே வரும், அதன் உண்மை தன்மையை வெளியே வரவிடாமல் கல்லூரி நிர்வாகம் தனது அரசியல், பண அதிகாரத்தை வைத்து தடுத்து வருகிறது என்கிற குற்றச்சாட்டும் உள்ளது.