ADVERTISEMENT

கேரளா அணை கட்டுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

12:15 PM Mar 07, 2018 | rajavel


ADVERTISEMENT


தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரமாட்டோம் என்பதோடு அட்டப்பாடியில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டிக்க கொண்டிருக்கிறது கேரளா. பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் கேரளாவின் நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால் கேரளாவுக்கு செல்லும் அனைத்து வழிகளையும் மறிப்போம். கேரளாவுக்கு எந்தப் பொருட்களும் இனி தமிழகத்தில் இருந்து கிடைக்காது என சொல்லி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கு.ராமகிருட்டிணன் தலைமையில் அனைத்து கட்சியினரும் கேரளா அட்டப்பாடிக்கு செல்ல முயன்றபோது தமிழ்நாடு - கேரளா எல்லையான ஆனைகட்டி அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு அனைத்துக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் மட்டும் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT