Skip to main content

தமிழக எல்லையில் கேரள மருத்துவக் கழிவு... கையும் களவுமாக பிடித்த தமிழக விவசாயிகள்!

Published on 08/04/2021 | Edited on 08/04/2021

 

Kerala medical waste at the Tamil Nadu border ...

 

தமிழக - கேரள எல்லையான பொள்ளாச்சி அருகே மருத்துவக் கழிவுகளைக் கொட்டவந்த கேரள லாரிகளை விவசாயிகள் சிறைபிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

தமிழக - கேரள எல்லைப்பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில், கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழக - கேரள எல்லையான பொள்ளாச்சியில் உள்ள செம்மனாம்பதி கிராமம், இரட்டைவேடு என்ற இடத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜோஸ், பாலக்காடு மாவட்டத்தில் இருந்து மருத்துவக் கழிவுகளைக் கொட்ட இருப்பதாக தகவல் கிடைக்க, அதிகாலையிலேயே விவசாயிகள் அங்கு கூடினர். திட்டமிட்டபடி அங்கு காலை, 4 டிப்பர் லாரிகளில் கொண்டுவரப்பட்ட மருத்துவக் கழிவுகளை மர்ம நபர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் குழிதோண்டி கொட்ட முயன்றனர்.

 

ஆனால், அங்கு கூடியிருந்த விவசாயிகள் மருத்துவக் கழிவுகளோடு நின்றிருந்த டிப்பர் லாரிகளைக் கையும் களவுமாக சிறைபிடித்து காவல்துறைக்கும், வருவாய்துறைக்கும் தகவலளித்தனர். அங்கு வந்த காவல்துறையினர் பொக்லைன், டிப்பர் லாரிகளைக் கைப்பற்றியதோடு, தோட்டத்து உரிமையாளர் ஆண்டனி ஜோஸ் என்பவரையும், லாரி ஓட்டுநர்களையும் தேடிவருகின்றனர்.

 

''கேரள மருத்துவக் கழிவுகள், தடையை மீறி தமிழக எல்லைகளில் கொட்டப்படுவது என்பது அடிக்கடி நடைபெறும் ஒன்றாக இருக்கிறது. இதற்கும் மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என லாரிகளை சிறைபிடித்த விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.