கோவையில் கேரளா லாட்டரிகள் அமோகமாக விற்பனை செய்யப்படுவதாக சிங்காநல்லூர் போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து காமாட்சி புரம் செக்போஸ்டில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் ஒருவர் 2,900 எண்ணிக்கையிலான கேரளா லாட்டரி சீட்டுகளை கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
பின்னர் நடத்திய விசாரணையில், அவர் திருச்செந்தூரைச் சேர்ந்த பிரபு(28) என்பதும், கோவையில் தொடர்ந்து கேரளா லாட்டரிகளை அவர் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. அவரை கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Show comments