Skip to main content

மாவோயிஸ்ட் மணிவாசகம் சடலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சொந்த ஊரில் தகனம்! 

Published on 16/11/2019 | Edited on 16/11/2019

கேரளா போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் உடல், வியாழக்கிழமை நள்ளிரவு (நவ. 14) சொந்த ஊரில் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் தகனம் செய்யப்பட்டது.
 

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் மணிவாசகம் (55). மாவோயிஸ்ட் போராளியான இவர், கேரளா மாநிலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பதுங்கி இருந்து மாவோயிஸ்ட் போராளிகளுக்கு ஆயுதப்பயிற்சி அளித்து வந்தார். 
 

kerala incident salem manivasakam  Cremated with police security.


இந்நிலையில் கடந்த அக். 29ம் தேதி, அட்டப்பாடி அருகே மஞ்சக்கண்டி வனப்பகுதியில் அவரை சுற்றி வளைத்த கேரளாவின் தண்டர்போல்ட் சிறப்பு காவல்துறை படையினர், அவரை சுட்டுக்கொன்றனர். இதில் அவர் நிகழ்விடத்திலேயே பலியானார். அதற்கு முதல் நாளில் அஜிதா, கார்த்திக், சுரேஷ் ஆகிய மாவோயிஸ்ட் போராளிகளையும் தண்டர்போல்ட் காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.


ஆரம்பத்தில் மணிவாசகத்தின் உடலை, சொந்த குடும்பத்தினருக்கே கூட காட்டாமல் கேரள காவல்துறை அலைக்கழித்தது. பின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலத்தில் வசிக்கும் மணிவாசகத்தின் தங்கை லட்சுமிக்கு, அவருடைய உடலை பார்க்க அனுமதி அளிக்கப்பட்டது. அதையடுத்து சடலம், கூறாய்வு செய்யப்பட்டது. மணிவாசகத்தின் சடலத்தை சொந்த ஊரில், நவ. 14ம் தேதி நள்ளிரவுக்குள் அடக்கம் செய்யவும் மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது. 

kerala incident salem manivasakam  Cremated with police security.

இறுதிச்சடங்கில், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்ட் போராளிகளான அவருடைய தங்கை சந்திரா, மனைவி கலா ஆகியோரும் கலந்து கொள்ளவும் மதுரை உயர்நீதிமன்றக் கிளை அனுமதி அளித்தது. இவர்கள் இருவருக்கும் நவ. 14ம் தேதி காலை 11.30 மணியளவில் பரோலில் விடுவிக்க அனுமதி கிடைத்தது. அதையடுத்து அவர்கள் திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.


ஆனால் ஏனோ அவர்கள் இருவரையும் திருச்சியில் இருந்து காவல்துறையினர் சேலத்திற்குக் கொண்டு வர இரவு 11.45 மணி வரை காலம் கடத்தியிருந்தனர். அதேபோல், சேலம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ள மணிவாசகத்தின் உடலும் அன்று இரவு 9.20 மணிக்குதான் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சேலத்தில் இருந்து பலத்த காவல்துறை பாதுகாப்புடன் சொந்த ஊரான ராமமூர்த்தி நகர் சுடுகாட்டுக்கு நேரடியாக நள்ளிரவு 11.45 மணியளவில்தான் கொண்டு சென்றுள்ளனர்.

kerala incident salem manivasakam  Cremated with police security.


மணிவாசகத்தின் உடலுக்கு செவ்வணக்க அஞ்சலி செலுத்துவதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட மாவோவிய போராளிகள் ராமமூர்த்தி நகரில் குவிந்து இருந்தனர். ஆனால், நீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டி, நள்ளிரவுக்குள் இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என்பதால் காவல்துறையினர் எல்லோரையும் அவசரப்படுத்தினர். இதனால் சடலத்திற்கு கலாச்சார வழக்கப்படி செய்ய வேண்டிய இறுதிக்காரியங்கள் செய்யவும் அனுமதிக்கவில்லை. மாவோயிஸ்ட் போராளிகள் பலரையும் சடலத்தை நெருங்கவும் விடாமல் போலீசார் தடுத்தனர். 


மணிவாசகத்தின் மனைவி கலா, தங்கை சந்திரா ஆகியோர் உடலை தொட்டு, கதறி அழுதனர். அப்போது சந்திரா, மாவோவிய போராளிகள் இறந்தால், பாடக்கூடிய 'தியாகிகளே தியாகிகளே' என்ற இரங்கல் பாடலையும் பாடினார். 


முன்னதாக நடந்த இரங்கல் கூட்டத்தில் மாவோ போராளிகள், மணிவாசகம் உள்ளிட்ட நான்கு தோழர்களை பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு திட்டுமிட்டு கொலை வெறித்தாக்குதலை நடத்தியுள்ளது என்றும், அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு கண்டனம் தெரிவித்தும் பேசினர்.


நள்ளிரவைக் கடந்து 12.30 மணியளவில் மணிவாசகத்தின் உடலுக்கு, அவருடைய அண்ணன் சுப்ரமணியத்தின் மகன் அன்பரசு தீமூட்டினர். கியூ பிரிவு போலீசார் உள்பட அனைத்து உளவுத்துறை போலீசாரும், இறுதிச்சடங்கு நிகழ்வுகளையும், அங்கு வந்திருந்த மாவோ போராளிகள், ஊடகத்தினர் என ஒருவர் விடாமல் அனைவரையும் வீடியோ கேமராவில் பதிவு செய்தனர். தொடர்ந்து அந்த ஊரில் பலத்த காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.




 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.