Skip to main content

‘மாவோயிஸ்ட் மணிவாசகம் உடல் அடக்கத்தின்போது..’- சேலம் மாவட்ட எஸ்.பி.க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 06/11/2019 | Edited on 06/11/2019

மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் உடலை சேலம் மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு எடுத்து வர அனுமதி அளித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 
 

நாமக்கல்லைச் சேர்ந்த அன்பரசன், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில்,‘கடந்த 29-ஆம்தேதி கேரள மாநிலம் அகழிக்காடு பகுதியில் மாவோயிஸ்ட் மணிவாசகம் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டார். மணிவாசகத்தின் மனைவி கலா, சகோதரி சந்திரா ஆகியோர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு ள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்ட மணிவாசகத்தின் உடலை அடையாளம் காண கலா, சந்திரா ஆகியோரை திருச்சி சிறை போலீசார் அனுமதிக்கவில்லை. எனவே அவர்கள் இருவருக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கவும், மணிவாசகத்தின் உடலை அடையாளம் காண அனுமதிக்கவும் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’என்று கூறியிருந்தார்.

kerala incident madurai high court bench order


இந்த மனுவை கடந்த 31-ஆம் தேதி விசாரித்த உயர்நீதிமன்றம், ‘மணிவாசகத்தின் உடலை அடையாளம் காண, அவரது சகோதரி லட்சுமியை போலீசார் அனுமதிக்க வேண்டும்.  அவருடைய உடல் அடையாளம் காணப்பட்டால், உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும்’என்று உத்தரவிட்டது. அந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் முன்பு நேற்று (05/11/2019) விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டது மணிவாசகத்தின் உடல் தான் என்று மனுதாரர் தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து,‘மணிவாசகத்தின் உடலை சேலம் மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்குக் கொண்டு வர வேண்டும். 

kerala incident madurai high court bench order



அங்கு அவரது உடலைத் தனிநபருக்குச் சொந்தமான இடத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்கக்கூடாது. பொது மயானத்தில் அடக்கம் செய்யலாம். அவரது இறுதிச்சடங்கின்போது அசம்பாவிதம் நடக்காமல் தடுத்திட, உரிய பாதுகாப்பை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அளிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். பிறகு, மணிவாசகத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்க கலா, சந்திரா ஆகியோருக்கு இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்த விசாரணை 11- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.