Skip to main content

கேரள ஆளுநருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறார்- குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்!

Published on 12/07/2019 | Edited on 12/07/2019

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில ஆளுநரான சதாசிவம் அவர்களுக்கு சென்னை அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் சார்பில் நாளை கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. இந்த விழாவில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு கேரள கவர்னர் சதாசிவத்துக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மாநில அமைச்சர்கள் இந்த விழாவில் பங்கேற்க உள்ளன. தமிழகத்தை சேர்ந்த சதாசிவம் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்றவர் ஆவர். பின்னர் வழக்கறிஞராக பயிற்சி பெற்றார். அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றார். 

 

 

kerala governor sathasivam doctorate degree announced chennai ambedkar law univerty

 

 

 

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று மதியம்(12/07/2019) சென்னை வந்த குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் அமைச்சர்கள், காவல்துறை உயரதிகாரிகள் வரவேற்றன. அதன் பின் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் காஞ்சிபுரம் சென்று வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதர் சுவாமியை தரிசனம் செய்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இதற்கெல்லாம் துவண்டு போகக்கூடியவன் நான் அல்ல” - கேரள ஆளுநர் காட்டம்

Published on 27/01/2024 | Edited on 27/01/2024
 Kerala Governor says I am not the one who can get away with all this

கேரள மாநிலத்தை ஆளும் பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்கும், அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே தொடர்ந்து பனிப்போர் நிலவி வருகிறது. ஆளுநர் மீது அரசு குறை கூறுவதும், அரசு மீது ஆளுநர் குறை கூறுவதும் தொடர்ந்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடிய கேரள மாநில சட்டசபையில், ஆளுநர் தனது உரையை முழுவதும் நிறைவு செய்யாமல் 1.15 நிமிடத்தில் விரைவாக முடித்தார். இது சட்டசபையில் கடும் எதிர்ப்புக்கு உள்ளானது. இதன் காரணமாக குடியரசு தின விழாவையொட்டி ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை அரசியல் கட்சித் தலைவர்கள் புறக்கணித்தனர்.

இந்த நிலையில், இன்று (27-01-24) ஆளுநர் கொல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றிற்காகப் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலமேல் என்ற பகுதியில் ஆளுநர் காரில் சென்றுகொண்டிருந்தபோது, SFI மாணவர் அமைப்பினர் கறுப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தினர். அப்போது உடனடியாகத் தனது காரை நிறுத்திவிட்டு போராட்டக்காரர்களுடன் நேரடியாக ஆளுநர் ஆரிப் முகமது கான் வாக்குவாதம் செய்தார். தொடர்ந்து மாணவர் அமைப்பினர் முழக்கமிட்டதால் அருகே இருந்த டீக்கடையில் அமர்ந்துகொண்டு கறுப்புக்கொடி காட்டி போராட்டம் செய்தவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுவரை டீக்கடையை விட்டு வெளியே வரமாட்டேன் என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. 

இதனை தொடர்ந்து, கேரள ஆளுநர் ஆரிப் முகமது இன்று (27-01-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “ஆர்ப்பாட்டத்தில் முதலில் 12 பேர் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அதன்பின், அவர்கள் 17 பேர் என எஃப்.ஐ.ஆரில் எழுதப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு இருந்தனர். அந்த வழியாக முதல்வர் சென்றால் அங்கு 100க்கும் மேற்பட்ட போலீசார் முன்னிலையில் 22 பேர் கருப்புக் கொடியுடன் கூடிவிடுவார்களா?. அவர்களை கடமையைச் செய்யவிடாமல் தடுப்பது யார்?. இது அரசியல் காரணங்களுக்காக மட்டுமே. இதன் பின்னணியில் உள்ள அரசியல் தலைவர் யார்?. அது முதல்வரா? இதற்கெல்லாம் துவண்டு போகக்கூடியவன் நான் அல்ல” என்று கூறினார். 

Next Story

“ஆளுநர் விரும்பும் மோதல்களை உருவாக்க முடியாது” - கேரளா முதல்வர் பினராயி விஜயன்

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
Kerala Chief Minister Pinarayi Vijayan crictized kerala governor arif khan

சமீபத்தில், கேரள ஆளுநர் ஆரிஃப் கானுக்கு எதிராக அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. கேரள ஆளும் கட்சிக்கும், ஆளுநருக்கும் தொடர்ந்து பனிப்போர் நிலவி வந்த சூழலில், கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய 8 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆரிஃப் கான் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். 3 மசோதாக்கள் 2 ஆண்டுகளாகவும், 5 மசோதாக்கள் 1 ஆண்டாகவும் நிலுவையில் உள்ளன என்று கூறி கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. 

இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர்கள் அமைப்பான எஸ்.எஃப்.ஐ, கேரள ஆளுநருக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்தி ஆளுநர் ஆரிஃப் கான் வந்த காரை முற்றுகையிட்டனர். அப்போது கோபம் அடைந்த ஆளுநர் ஆரிஃப் கான், காரில் இருந்து கீழே இறங்கி ஆவேசமாகப் பேசியிருந்தார். மேலும் அவர், கேரளா முதல்வர் என்னை தாக்க சதி செய்ய ஆட்களை அனுப்பியுள்ளார் என்று பேசினார்.

இதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநர் அதற்காக வேலை செய்ய வேண்டும்; சங்பரிவார்களுக்காக அல்ல என்று கூறி அம்மாநிலத்தில் உள்ள அரசு சமஸ்கிருத கல்லூரிக்கு வெளியே பேனர் வைத்து கடந்த 18 ஆம் தேதி போராட்டம் நடத்தினர். அதேபோல், ஆளுநர் தங்கியிருந்த பல்கலைக்கழகத்தின் விருந்தினர் மாளிகை அருகிலும் பேனர் வைத்து போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து பேசிய கேரளா ஆளுநர் ஆரிஃப் கான், “முதலமைச்சர் இங்கு தங்கியிருந்தால், போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுபோன்ற பேனர் வைத்திருக்க முடியுமா?

கேரளா போலீஸ் இந்தியாவில் தலைசிறந்ததாகும். ஆனால், கேரளா முதல்வர் பினராயி விஜயன் இந்த சிறப்புமிக்க போலீஸ் துறையை களங்கப்படுத்திவிட்டார். அவருடைய உத்தரவுக்கு அடிபணிந்துதான் போலீஸ் தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த மாணவர்கள் அமைப்பினர் என்னை காயப்படுத்தினால், இங்கே வாருங்கள். அவர்கள் ஏன் இங்கு வரவில்லை? ஏனென்றால், அவர்கள் மாணவர்கள் அல்ல. அனைத்து மாணவர்களும் எஸ்.எஃப்.ஐ அமைப்பை சேர்ந்தவர்களா என்பதை நாம் பார்க்க வேண்டும். வேறு எந்த மாணவர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை” என்று பேசியிருந்தார். 

இந்த நிலையில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் இன்று (21-12-23) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “கேரளா ஆளுநர் ஆரிஃப் கான், மாநிலத்தின் அமைதியைக் கெடுக்க முயற்சிக்கிறார். அவரது வலையில், இம்மாநில மாணவர்கள் விழாமல் கட்டுப்பாட்டோடு இருக்கிறார்கள். மாணவர் அமைப்புகளுக்கு எதிராக ஆளுநர் கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தியுள்ளார். ஆனால் மாணவர்கள், அவரைப் போல் தங்களது தரத்தை தாழ்த்திக் கொள்ளாமல் அமைதியாக இருக்கின்றனர். இந்த அமைதியான மாநிலத்தில் ஆளுநர் விரும்பும் அளவிற்கான பிரச்சனைகளையும், மோதல்களையும் உருவாக்க முடியாது” என்று கூறினார்.