Skip to main content

விபத்தில் சிக்கிய கணவர்... இரண்டு நிமிடத்தில் ஏழ்மை பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்!

Published on 08/11/2019 | Edited on 08/11/2019

கணவன் விபத்தில் சிக்கியதால் வறுமையால் குடும்பம் நடத்த கஷ்டப்பட்ட பெண்ணுக்கு இரண்டு நிமிடத்திற்கு முன்பு வாங்கிய லாட்டரி சீட்டில் 60 இலட்சம் ருபாய் பரிசு கிடைத்துள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள தெற்கே ஆரியநாடு பகுதியை சேர்ந்தவர் லேகா. இவருக்கு வயது 30. இவரது கணவர் பெயர் பிரகாஷ்.இவருக்கு வயது 33. இந்த தம்பதிக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். லாரி டிரைவரான பிரகாஷ் விபத்தில் சிக்கியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு லாரி ஓட்ட முடியாத நிலையில் இருந்துள்ளார். இதனால் பணிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குடும்பம் நடத்த வருமானம் இல்லாமல் இருந்துள்ளனர். வருமானம் ஏதும் இல்லாத சூழ்நிலையில் குடும்பம் வறுமையில் வாடியது. இந்த நிலையில் லேகா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். 
 

kerala



இந்த நிலையில் கொம்மாடி பகுதியில் உள்ள ஒரு லாட்டரிக்கடையில் கேரள அரசு லாட்டரிச்சீட்டுகளை நேற்று முன்தினம் பகல் 2.58 மணிக்கு லேகா வாங்கியுள்ளார். அப்போது அவர் மொத்தம் 12 லாட்டரிச் சீட்டுகளை வாங்கியிருக்கிறார். அவர் லாட்டரி சீட் வாங்கிய இரண்டு நிமிடங்களுக்கு பிறகு பகல் 3 மணிக்கு அந்த லாட்டரிச்சீட்டுகளுக்கான குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் முதல் பரிசு ரூ.60 லட்சம் லேகா வாங்கிய லாட்டரிச்சீட்டுக்கு கிடைத்தது. பரிசு கிடைத்தது பற்றி லேகா கூறும் போது,  நான் ஏற்கனவே ஆலப்புழா கலெக்டர் அலுவலகம் அருகில் லாட்டரிச்சீட்டுகள் விற்பனை செய்துவந்தேன். எனது கணவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் லாட்டரி விற்பனை செய்ய முடியவில்லை. தற்போது கிடைத்துள்ள பரிசுப்பணம் மூலம் சிறிய வீடு கட்டுவேன். மீண்டும் லாட்டரிச்சீட்டு வியாபாரத்தில் ஈடுபடுவேன்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆன்லைன் ரம்மியில் மூழ்கிய கணவன்; மனைவி எடுத்த பரிதாப முடிவு

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
nn

ஆன்லைன் ரம்மி சூதாட்டம் காரணமாக பலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் தமிழகம் மட்டுமல்லாது பல மாநிலங்களில் நிகழ்ந்து வருகிறது. இந்தநிலையில் கள்ளக்குறிச்சியில் ரம்மி ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான கணவனால் மனைவி தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பிரதான சாலை பகுதியில் வசித்து வருபவர் செண்பகராமன். இவருடைய மனைவி கௌசல்யா. கணவன் செண்பகராமன் ரம்மி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் வெளியே சென்ற செண்பகராமன் ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டிருந்த பொழுது மனைவி கைது கௌசல்யா கால் செய்துள்ளார்.

ஆனால் செண்பகராமன் அவருடைய விளையாட்டில் பிஸியாக இருந்தால் அழைப்பை எடுக்க மறுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த செண்பகராமனிடம் கௌசல்யா செல்போன் அழைப்பை எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் வீட்டை விட்டு செண்பகராமன் வெளியே சென்ற நிலையில், கௌசல்யா மனமுடைந்து தூக்கிட்டு வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில் உடலை கைப்பற்றிய போலீசார் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு, இந்த சம்பவம் தொடர்பாக கணவன் செண்பகராமனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மனைவி இறந்த செய்தியைக் கேட்ட அடுத்த நொடியே உயிரிழந்த கணவன்!

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
 husband passed away the second he heard the news of his wife lost their life

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வயது முதிர்ந்த தம்பதியினர் ராஜா(65), ஜோதி(60). இவர்கள் விவசாயம் செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு  2 ஆண் மற்றும் ஒரு பெண் என 3 பிள்ளைகள் உள்ளனர். இவருடைய மனைவி ஜோதி கடந்த 2 ஆண்டுகளாக சிறுநீரகக் கோளாறு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த இந்நிலையில் நேற்று ஜோதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு வேலூர் அடுக்கம்பாரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இன்று அவர் சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்துள்ளார். இந்த செய்தியைக் கேட்ட அவரது கணவர் ராஜா அடுத்த நொடியே வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 

ad

இந்த தகவல் அறிந்த கிராம மக்கள், அரசியல் பிரமுகர்கள் நேரில் சென்று இருவர் உடலுக்கும் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். மிகவும் பாசமாக வாழ்ந்த வயது முதிர்ந்த தம்பதியினர் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.