Skip to main content

பழங்குடியினப் பெண்ணிடம் அத்துமீறல்; மன்னிப்பு கேட்ட கேரள வனத்துறை

Published on 27/10/2022 | Edited on 27/10/2022

 

 Kerala Forest Department Apologizes to Tribal Woman for Trespassing

 

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரின் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய தலையணைப் பகுதியில் சுமார் 43 மலைவாழ் பழங்குடியினத்தவர்கள் குடும்பமாக வசித்து வருகின்றனர். மலைப் பகுதியில் தேன் எடுத்தல்,குங்கிலியம்,சுண்டைக்காய்,கல்தாமரை மற்றும் சிறு வன மகசூல் போன்றவைகளையும் சேகரிக்கும் தொழிலில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்தச் சூழலில் கடந்த 23 ம் தேதி அன்று தலையணை பகுதியில் வசிக்கும் ஈசன் என்பவரின் மனைவி சரசு, இரண்டு பெண்கள் மற்றும் ராஜா என்பவர் உள்ளிட்ட பழங்குடியினத்தவர் சிலர் தமிழக-கேரள வன எல்லையான செண்பகவல்லியம்மன் அணைப்பக்கம் வன மகசூலைச் சேமித்திருக்கிறார்கள். பின்னர் அதனை தோளில் சுமந்துகொண்டு குடியிருப்புக்குத் திரும்பும் பொருட்டு மலையிலிருந்து கீழே இறங்கியுள்ளனர். அந்நேரம் மலைமேல் சென்றுகொண்டிருந்த கேரள வனத்துறையினர், மலைவாழ் பழங்குடியினப் பெண் ஒருவரை வழிமறித்து இது கேரள வனப்பகுதி இந்தப் பகுதிக்குள் யாரும் வரக்கூடாது சுமையை இறக்கு என்றவர்கள் அத்துமீறி அந்தப் பெண் தோளில் வைத்திருந்த வன மகசூலைப் பிடித்து இழுத்து அவமானப்படுத்தியதில் அந்தப் பெண்ணின் சேலை கிழிந்திருக்கிறது.

 

இதையடுத்து அவர்கள் தலையணை வந்து பின்னர் நடந்தவைகளை வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இதுகுறித்து வாசுதேவநல்லூர் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் கேரளா மற்றும் தமிழக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதனையடுத்தே கேரள வனத்துறையைச் சேர்ந்த பெரியார் கோட்ட வனச் சரகர் அகில்பாபு, கடையநல்லூர் வனச்சரகர் சுரேஷ், இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் தலையணைப் பகுதியில் வசிக்கும் பளியர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மக்கள், சமூக ஆர்வலர்களான பாண்டியன், ராமராஜ் ஆகியோர் பங்கேற்ற அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது.

 

 Kerala Forest Department Apologizes to Tribal Woman for Trespassing

 

அப்பொழுது கடந்த 3ம் தேதி அன்று நடைபெற்ற சம்பவத்திற்கு கேரளாவின் பெரியார் கோட்ட வனச்சரகர் அகில் பாபு வருத்தம் தெரிவித்தவர், சம்பவத்தில் தொடர்புடைய வனக்காவலர்களை நவ 2ம் தேதிக்குள் விசாரணை செய்வதாக உறுதியளித்தார். மேலும் அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியிருப்பு வாசிகளை தமிழக வனத்துறை எல்லைக்குள்  சோதனை செய்வதோ மரியாதைக் குறைவாக நடத்துவதோ அப்பகுதி மக்களுக்கு அச்சம் ஏற்படும் எந்த ஒரு செயலிலும் ஈடுபடமாட்டோம் என்றும் தமிழக எல்லையைத் தாண்டி கேரளா எல்லைக்குள் பாதை நோக்கத்திற்காக வருபவர்களை எந்த வகையிலும் தொந்தரவு செய்யமாட்டோம் என்றும் கேரள வனத்துறையினர் எழுதிக் கையெழுத்திட்டு கொடுத்தனர்.

 

பழங்குடியினவாசியான ஜோசப் என்பவர் கூறுகையில், “எங்கள் மக்கள் சென்ற செண்பகவல்லி அணைப்பகுதி தமிழக வனத்துறைப் பகுதியாகும். கேரள வனத்துறையினர் தான் பழங்குடியினப் பெண்ணிடம் அத்துமீறி இருக்கிறார்கள்” என்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மின்னணு வாக்குப்பதிவு குறித்த புகார்; உச்ச நீதிமன்றம் அதிரடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Complaint about electronic voting; The Supreme Court is in action

தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘ஒப்புகைச் சீட்டு இயந்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? என்பது கூட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சரி பார்ப்பாகும். இதிலும் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவை மக்கள் நம்பாத பட்சத்தில் ஒப்புகை சீட்டுகளை அதனுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1960ல் 50 லிருந்து  60 கோடிகளில் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 97 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள், என்றால் கூட அத்தனை வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளையும் எப்படி, எப்போது எண்ணி முடிப்பது? இத்தனை கோடி வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 12 நாட்கள் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது என நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கூறுகிறது. ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்காது என்று  சொல்ல முடியாது எனவே. 100% ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இரண்டாவது முறையாக இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அவர் அப்போது வாதிடுகையில், “கேரளா மாநிலம் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் ஒரு முறை வாக்குப்பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுவதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து இது குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை பற்றி பல்வேறு கேள்விகளையும் நீதிபதி எழுப்பியுள்ளனர். 

Next Story

திருமணத்தின் போது மணமகனின் அநாகரிக செயல்; அதிரடி முடிவு எடுத்த மணப்பெண்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
The bride who broke off the wedding in kerala

கேரளா மாநிலம், பத்தனதிட்டம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 32 வயது வாலிபர். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மேலும், இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருமண நாள் அன்று, மணமகன் மது குடித்துவிட்டு போதையில் மணமேடைக்கு வந்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட, மணப்பெண் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மது போதையில் இருந்த மணமகன், பாதிரியாரிடமும், மணபெண்ணின் உறவினர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனைக் கண்டு கோபமடைந்த மணப்பெண், திருமணம் வேண்டாம் என்று அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனால், அவர்களது திருமணம் பாதியில் நின்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மணப்பெண் குடும்பத்தினர், ‘தங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், திருமணத்திற்கு பெரும் தொகை செலவு செய்ததால், அந்த தொகையை நஷ்ட ஈடாக திரும்ப தர வேண்டும். இல்லையென்றால், மணமகன் மீதும், அவரது உறவினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு, மணப்பெண் குடும்பத்தினர் செலவு செய்த தொகையான 6 லட்ச ரூபாயை நஷ்ட ஈடாக திரும்ப கொடுக்க மணமகனின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, அனைவரும், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே, மது போதையில் அனைவரிடமும் தகராறு செய்ததற்காக மணமகனின் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.