Skip to main content

பழங்குடியினப் பெண்ணிடம் அத்துமீறல்; மன்னிப்பு கேட்ட கேரள வனத்துறை

Published on 27/10/2022 | Edited on 27/10/2022

 

 Kerala Forest Department Apologizes to Tribal Woman for Trespassing

 

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரின் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய தலையணைப் பகுதியில் சுமார் 43 மலைவாழ் பழங்குடியினத்தவர்கள் குடும்பமாக வசித்து வருகின்றனர். மலைப் பகுதியில் தேன் எடுத்தல்,குங்கிலியம்,சுண்டைக்காய்,கல்தாமரை மற்றும் சிறு வன மகசூல் போன்றவைகளையும் சேகரிக்கும் தொழிலில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்தச் சூழலில் கடந்த 23 ம் தேதி அன்று தலையணை பகுதியில் வசிக்கும் ஈசன் என்பவரின் மனைவி சரசு, இரண்டு பெண்கள் மற்றும் ராஜா என்பவர் உள்ளிட்ட பழங்குடியினத்தவர் சிலர் தமிழக-கேரள வன எல்லையான செண்பகவல்லியம்மன் அணைப்பக்கம் வன மகசூலைச் சேமித்திருக்கிறார்கள். பின்னர் அதனை தோளில் சுமந்துகொண்டு குடியிருப்புக்குத் திரும்பும் பொருட்டு மலையிலிருந்து கீழே இறங்கியுள்ளனர். அந்நேரம் மலைமேல் சென்றுகொண்டிருந்த கேரள வனத்துறையினர், மலைவாழ் பழங்குடியினப் பெண் ஒருவரை வழிமறித்து இது கேரள வனப்பகுதி இந்தப் பகுதிக்குள் யாரும் வரக்கூடாது சுமையை இறக்கு என்றவர்கள் அத்துமீறி அந்தப் பெண் தோளில் வைத்திருந்த வன மகசூலைப் பிடித்து இழுத்து அவமானப்படுத்தியதில் அந்தப் பெண்ணின் சேலை கிழிந்திருக்கிறது.

 

இதையடுத்து அவர்கள் தலையணை வந்து பின்னர் நடந்தவைகளை வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இதுகுறித்து வாசுதேவநல்லூர் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் கேரளா மற்றும் தமிழக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதனையடுத்தே கேரள வனத்துறையைச் சேர்ந்த பெரியார் கோட்ட வனச் சரகர் அகில்பாபு, கடையநல்லூர் வனச்சரகர் சுரேஷ், இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் தலையணைப் பகுதியில் வசிக்கும் பளியர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மக்கள், சமூக ஆர்வலர்களான பாண்டியன், ராமராஜ் ஆகியோர் பங்கேற்ற அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது.

 

 Kerala Forest Department Apologizes to Tribal Woman for Trespassing

 

அப்பொழுது கடந்த 3ம் தேதி அன்று நடைபெற்ற சம்பவத்திற்கு கேரளாவின் பெரியார் கோட்ட வனச்சரகர் அகில் பாபு வருத்தம் தெரிவித்தவர், சம்பவத்தில் தொடர்புடைய வனக்காவலர்களை நவ 2ம் தேதிக்குள் விசாரணை செய்வதாக உறுதியளித்தார். மேலும் அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியிருப்பு வாசிகளை தமிழக வனத்துறை எல்லைக்குள்  சோதனை செய்வதோ மரியாதைக் குறைவாக நடத்துவதோ அப்பகுதி மக்களுக்கு அச்சம் ஏற்படும் எந்த ஒரு செயலிலும் ஈடுபடமாட்டோம் என்றும் தமிழக எல்லையைத் தாண்டி கேரளா எல்லைக்குள் பாதை நோக்கத்திற்காக வருபவர்களை எந்த வகையிலும் தொந்தரவு செய்யமாட்டோம் என்றும் கேரள வனத்துறையினர் எழுதிக் கையெழுத்திட்டு கொடுத்தனர்.

 

பழங்குடியினவாசியான ஜோசப் என்பவர் கூறுகையில், “எங்கள் மக்கள் சென்ற செண்பகவல்லி அணைப்பகுதி தமிழக வனத்துறைப் பகுதியாகும். கேரள வனத்துறையினர் தான் பழங்குடியினப் பெண்ணிடம் அத்துமீறி இருக்கிறார்கள்” என்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

9 ஆண்டுகளாக ஓட்டுப் போட முடியாமல் தவிக்கும் பெண்; காரணம் என்ன?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Woman unable to vote for 9 years in kerala

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே வேளையில், கடந்த 9 ஆண்டுகளாக கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், ஷொர்ணாவூர் அருகே குருவாயூரப்பன் பகுதியைச் சேர்ந்தவர் உஷா (62). இவர் கடைசியாக, 2016ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது வாக்களித்துள்ளார். அப்போது, அவர் வாக்களித்தன் சான்றாக தேர்தல் ஆணையத்தின் சார்பாக அதிகாரிகள் அவருடைய ஆள்காட்டி விரலில் ‘மை’ வைத்துள்ளார்கள். வழக்கமாக அங்கு வைக்கப்படும் ‘மை’ சில நாட்களில் தானாகவே அழிந்துவிடும். ஆனால், உஷாவுக்கு நீண்ட நாட்களாகியும் அழியவில்லை. இதில் குழப்பமடைந்த உஷா, சோப்பு உள்ளிட்ட பல பொருட்களைப் பயன்படுத்தி மையை அழிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மை அழியவில்லை.

இதனையடுத்து, உஷா கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால், அவரது விரலில் மை இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவருக்கு வாக்களிக்கும் அனுமதியை மறுத்துவிட்டனர். இதில் மனமுடைந்த உஷா, இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால், இப்போதும் அவரது விரலில் மை இருப்பதால் அவர் வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார்.