Skip to main content

கேரளா வெள்ளம்;நடிகர் ரஜினிகாந்த் 15 லட்சம் நிதியுதவி !!

Published on 18/08/2018 | Edited on 18/08/2018

 

rajini

 

 

 

நடிகர் ரஜினிகாந்த் கேரளாவெள்ளதிற்கு நிவாரண நிதியாக 15 லட்சம் அளித்துள்ளார்.

கேரளாவில் இதுவரை வெள்ளத்தினாலும், நிலச்சரிவினாலும் 300 பேருக்கு  மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக கேரளா முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் மீட்பபுப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கேரளாவில் கனமழை காரணமாக 33 அணைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் மீட்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 21 குழுக்களாக மீட்புக்குழுவினர்கள் பிரிந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர்

இந்நிலையில் அண்டை மாநிலங்கள், தொண்டு நிறுவனங்கள், பிரபலங்கள் என பலர் கேரளாவிற்கு வெள்ள நிவாரண நிதி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கொடுத்து உதவி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கேரளா வெள்ளதிற்கு நிவாரண நிதியாக 15 லட்சம் அளித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்