Skip to main content

20 ஆண்டுகளாக துண்டிக்கப்பட்டுள்ள மின் இணைப்பை மீண்டும் வழங்கிய கேரளா!

Published on 01/02/2021 | Edited on 01/02/2021

 

Kerala Electricity Board restores power supply to Mullaiperiyaru Dam

 

தமிழக கேரள எல்லையான தேக்கடியில் அமைந்துள்ளது கர்னல் பென்னி குக் கட்டிய முல்லைப் பெரியாறு அணை. தென் தமிழகத்தில் உள்ள தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் நீராதாரமாகத் திகழும் இந்த அணை, தமிழகப் பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.


இந்த முல்லைப் பெரியாறு அணைப்பகுதிக்குத் தேவையான மின்சாரம் கேரளாவின் வல்லக்கடவு பகுதியில் இருந்து விநியோகம் செய்யப்பட்டுவந்தது. கடந்த, 2000ஆம் ஆண்டு மின் கம்பிகள் உரசியதில் யானை உயிரிழந்ததையடுத்து முல்லைப் பெரியாறு அணைக்கு வழங்கிவந்த மின்சாரத்தை கேரள மின்வாரியம் நிறுத்தியது. இதனால், மதகுப்பகுதி, ஆய்வாளர் மாளிகை, அணைப்பகுதி, குடியிருப்புப் பகுதிகளில் ஜெனரேட்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், அணைப்பகுதிக்கு மின் இணைப்பு வழங்க பெரியாறு புலிகள் சரணாலயம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவந்தது. 

 

இதனை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில், தமிழக அரசு  வழக்கு தொடர்ந்து, பாதுகாக்கப்பட வேண்டிய அணைப் பகுதிக்காக நிலத்துக்கு அடியில் கேபிள்கள் பதித்து  அவசியம் மின் இணைப்பு வழங்க வேண்டும் எனக் கோரியது. இதனை ஏற்ற கேரள உயர்நீதிமன்றம், முல்லைப் பெரியாறு அணைக்கு மின்சாரம் வழங்க உத்தரவிட்டது. அதனடிப்படையில், வல்லக்கடவு பகுதியில் இருந்து 5.5 கி.மீ தூரத்தில் பூமிக்கு அடியில் மின்சாரக் கம்பிகள் பதிக்கும் பணிகள் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பணிகள் துவக்கப்பட்டது. மேலும், இதற்காக கேரள மின்வாரியத்திற்கு ரூ.1.65 கோடியை தமிழக அரசு செலுத்தியது.
 

Kerala Electricity Board restores power supply to Mullaiperiyaru Dam


இந்நிலையில், பூமிக்கு அடியில் மின்சாரக் கம்பிகள் பதிக்கும் பணிகள் கடந்த ஜனவரியில் முடிவடைந்ததை அடுத்து இன்று அதற்கான இணைப்பு விழா நடைபெற்றது. இடுக்கி மாவட்டம் வண்டிப் பெரியாரில் நடைபெற்ற விழாவில், கேரள மின்சாரத்துறை அமைச்சர் எம்.எம்.மணி, முல்லைப் பெரியாறு அணைக்கான மின் இணைப்பைத் துவக்கி வைத்தார். இந்தவிழாவில், இடுக்கி எம்.பி. டீன் குரியகோஸ், பீர்மேடு எம்.எல்.ஏ. பிஜூமோள், தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் மற்றும் தமிழக - கேரள பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். 20 ஆண்டுகளுக்குப்பின் அணைக்கு மின் இணைப்பு வழங்கியதால் தென்தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்ததுடன் மட்டுமல்லாமல் தமிழக அரசுக்கும் நன்றி சொல்லி வருகிறார்கள்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

136 அடியை தொட்ட முல்லை பெரியாறு; முதல் கட்ட எச்சரிக்கை விடுப்பு

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

 Mullai Periyar who touched 136 feet; First stage warning leave

 

முல்லை பெரியாறு அணை 136 அடியை எட்டியதை அடுத்து முதல் கட்ட அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழைபொழிந்து வருகிறது. நீர் நிலைகளும் நிரம்பி வருகிறது. இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பொழிந்து வருகிறது. முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியுள்ளது. இதனை அடுத்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் நிர்வாகத்திற்கு தமிழக நீர்வளத்துறை சார்பில் எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

 

தொடர்ந்து அணை 138 அடியை எட்டியதும் இரண்டாம் கட்ட எச்சரிக்கையும், 140 அடியை எட்டியதும் மூன்றாம் கட்ட எச்சரிக்கையும் மற்றும் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். தொடர்ந்து அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு முதல் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகப் பகுதிக்கு 1000 கன அடிக்கும் மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தமிழக பொதுப்பணித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

 

 

Next Story

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் கார் பார்க்கிங் விவகாரம்; உச்ச நீதிமன்றம் அதிரடி

Published on 18/10/2023 | Edited on 18/10/2023

 

Car parking issue in Mullaip Periyar dam area; The Supreme Court is in action

 

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கார் பார்க்கிங் அமைப்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் மிகப்பெரிய நான்கு சக்கர வாகன நிறுத்தம் அமைக்கும் பணியில் கடந்த 2013 ஆண்டு முதல் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதிகள் தமிழகத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருப்பதால், அதில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி இல்லை என்று தெரிவித்தும், கேரளா அரசின் முடிவை எதிர்த்தும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

 

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “நில அளவை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் மேற்பார்வைக் குழுவின் தலைமையில் கேரளா மற்றும் தமிழகத்தை உள்ளடக்கிய கூட்டு சர்வே நடத்த வேண்டும். இது குறித்து இரு மாநில அரசுகளும் பதிலளிக்க வேண்டும்” என தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.